Monday, December 6, 2010

பார்வை:

உண்மையான
காதலுக்கு - உடல்
தெரியாது.
உள்ளம் மட்டுமே
தெரியும்.

பொய்:

ஏழையின் சிரிப்பில்
இறைவனை
காணலாம் - ஆம்
உண்மைதான்
கடவுள் இல்லை.

புனிதம்:

சொல்லாமல்
இருக்கும்
வரையில்தான்
காதல்
புனிதமானது.

மரணம்:

ஒருவனின்
மரணம் மற்றவர்களை
கண்ணீர் சிந்தவைத்தால்
அந்த
மரணம்
புனிதமாக்கப்படுகிறது.

பாவம்:

உலகில்
மிகவும்
கொடுமையான
செயல் - தான்
மரணமடைந்து
மற்றவர்களை
அழவைப்பதுதான்.

ரசிகன்:

எவனோ ஒருவன்
மகிழ்ச்சியடைவான் என்றால்
நான் எத்தனைமுறை
வேண்டுமானாலும்
தோல்வியடைய தயார்.

சோம்பேறி:

மின்விசிறி
சுற்றிகொண்டிருக்கிறது.
சுறுசுறுப்பாய்...
மனிதன்
அதனடியில்
சோம்பேறியாய்...

தேடல்:

நான் பிறந்ததிலிருந்து,
என் வெற்றியின் தேடல்
தொடங்கிவிட்டது.
இன்றுவரை
தேடிகொண்டிருக்கிறேன்.
சில காலங்களுக்கு பிறகு
வெற்றியடையலாம்.
எனினும்,
வாழ்க்கையில்
தோல்வியடைய போகிறேன்
சில காலங்களுக்கு பிறகு
மரணமடைந்து...

மாற்றம்:

இத்தனை நாள்
சொர்கத்தை
தேடிகொண்டிருந்தேன்..
இந்த நரகத்திலிருந்துகொண்டு
இன்றுமுதல்
நான் வசிக்கும்
நரகம் சொர்க்கமாகிறது.
என்னவளை
பார்த்துவிட்டேன் அல்லவா?
அதனால்தான்.

என் லட்சியம்:

என்
பிறப்பை கண்டு
எத்தனை பேர்,
சிரித்தார்களோ?
எனக்கு தெரியாது.
ஆனால், என் இறப்பை கண்டு
யாரும் கண்ணீர்
சிந்தகூடாது...

சரியான கூற்று:

பெண்ணே,
ஐன்ஸ்டீனின் கூற்று
சரியானது தான்
காலம்
நீண்டும், குறுகியும்தான்
இருக்கிறது.
நீ என்னருகில்
இருக்கும்போதும்
என்னைவிட்டு
விலகியிருக்கும் போதும்.

வறுமை:

நான்
நீ வருவாய் என
எதிர்பார்த்துகொண்டிருந்த
தருணங்களில்
உன்னை
கவிதையாக எழுதியே
வறுமையில் இருக்கிறேன்
இன்று வார்த்தைகள்
தீர்ந்துபோனதால்...

நிழல்:

என் தீவிர
விசிறி
என் நிழல்
நான் எங்கே
சென்றாலும்,
என் கூடவே வரும்.

அய்யோ...:

அழகை பார்த்தால்
கவிதை எழுதலாம் - பெண்ணே
ஆனால் கவிதையை
பாத்தால் என்ன
எழுதுவது.

விருப்பம்:

நான்
என்னை மற்றவர்கள்
நல்லவன் என
நினைக்கவேண்டுமென்று,
கெட்டவனாக
இருக்கமாட்டேன்.
என்னை
மற்றவர்கள்
கெட்டவன் என
நினைத்தாலும்,
பரவாயில்லை - நான்
நல்லவனாக
இருக்க விரும்புகிறேன்.

என்னசெய்வது?:

பெண்ணே
உன் கண்களை
பார்த்த வேளையில்
என் இதயம்
சொல்கிறதடி....
உனக்காக வாழலாம்,
உனக்காக சாகலாம் என்றும்.

புனிதம்:

உலகில்
மிகவும்
கேவலமானது
ஒரு பெண்ணிற்க்காக
சண்டையிட்டு கொள்வதுதான்.
உலகில்
மிகவும்
புனிதமானது
ஒரு பெண்ணிற்க்காக
சண்டையிட்டு கொள்வதுதான்.

உனக்காக:

எத்தனை பேர்
என்னை
சுற்றியிருந்தாலும்,
நான் மட்டும் தனிமையில்
இருக்கிறேன்
நீ வருவாய் என...

நான் கடவுள்:

உயிருள்ள
என்னை படைத்துவிட்ட - இறைவன்
உயிரற்ற என் உடலுக்கு
என் உயிரை கொடுத்துவிட்டான்.
அதனால் தான்
உயிருள்ள என்னால்,
உயிரற்ற, என் உடலை
கட்டுபடுத்த முடியவில்லை
இல்லையெனில்,
உயிருள்ள
நானும் - உயிரற்ற
கடவுளாகதான் இருந்திருப்பேன்
உயிரோடு...

சுய நலம்:

தனக்கென
ஒரு பிரச்சனை
வரும்போதுதான்
எல்லாரும்
கேள்விகேட்க
ஆரம்பிக்கிறார்கள்..

No comments: