முன்னுரை
இன்றைய
சமுதாயத்தில் சிந்திக்க தெரியாத மனிதனின் பார்வையின்படி, பல பெரிய ஊழல்கள் எல்லாம்
நிகழ்கின்றன. ஆனால், அப்படிபட்ட ஊழல்களுக்கு எல்லாம் அடிப்படை, கல்வி என்ற மாபெரும்
ஊழல் தான் என்பது யாருக்கும் தெரிவதில்லை. என்னசெய்வது சிந்திக்க தெரியாதவர்களை. ஆனால்,
பரவாயில்லை ஏனெனில், அவர்களுக்காக அப்படிபட்ட சமுதாயத்திற்காக சிந்திக்கதான் நான் இருக்கிறேன்.
நான் கல்வி என்ற மாபெரும் ஊழலை எழுத எனக்கு தகுதி இருக்கிறதா?
இல்லையா? என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், சமுதாயத்தில் அப்படிபட்ட தகுதி இல்லாத கையாலாகாதவர்களின்
தூண்டுதலால்தான், நான் தகுதி பெற்று இதை எழுதுகிறேன்.
இந்த உலகத்தில் எல்லாரும் உண்மை என்ற ஆயுதத்திக்காக மட்டும்தான்
பயப்படுவார்கள். பயம் என்பது இரண்டு பக்கமும் கூர்மை கொண்ட கத்தியை போன்றது. இதில்,
சமுதாயமானது தன் பயத்தை போக்கிகொள்ள, என்பக்கம் இருக்கும் முனையை என்னுள் குத்திகுத்தி
பயமுறுத்தி கொண்டிருந்ததன் விளைவு, என்பக்கம் இருந்த கூர்மை கொண்ட முனை மழுங்கடிக்கபட்டு,
என்னால் லாவகமாக பிடிக்கமுடியும் அளவிற்கு கைப்பிடியாக மாற்றிவிட்டது. எனவே, என்பக்கம்
இருக்கும் உண்மை என்ற ஆயுதத்தை இறுக்கமாக கைப்பிடித்து சமுதாயத்தின் பக்கம் இருக்கும்
பயம் என்ற கூர்முனையால், சமுதாயத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை எல்லாம் அழித்து சமதர்மம்,
சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் நிலவும் பாதுகாப்பான ஓர் சமுதாயத்தை அமைத்தே தீருவேன்.
அதன் முதல் அடித்தான் இந்த "கல்வி என்ற மாபெரும் ஊழல்."
உயிர்களின் தோற்றமும், தகவல் பரிமாற்றமும்
இந்த உலகத்தில் உயிரினங்கள் எப்படி தோன்றியது, உலகம்
எப்படி தோன்றியது, இந்த உலகம் இருக்கும் பிரபஞ்சம் எப்படி தோன்றியது என்று எல்லாம்
பல விதமான கோட்பாடுகளும், கருத்துக்களும் மனிதனால் சொல்லபடுகிறது. இவையனைத்தும், மனிதனால்
மட்டும்தான் சொல்லபடுகிறதே தவிர, மனிதன் சொல்கிறான் என்பதாலேயே இத்தகைய கோட்பாடுகள்
அனைத்தும் சரியாக இருக்கும் என்றும், அல்லது தவறாக இருக்கும் என்றும் சொல்லமுடியாது,
ஆனால் எதிர்பாராத விதமாக சரியாக இருக்கலாம் அல்லது தவறாக இருக்கலாம். ஏனெனில் மனிதன்
தனக்குத்குதானே, அறிவாளி என பெயர் வைத்து கொண்டு, தான் இயற்கையின் புதிர்களை எல்லாம்
கட்டவிழ்க்க போகிறேன் என்று சொல்லிகொள்கிறானே தவிர, அவனால் எந்த புதிருக்கும் விடையை
கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் தான் கண்டுபிடித்தது எல்லாம் தன் அறிவுக்கு எட்டியவரை
உண்மை என்றே சொல்லிக்கொள்கிறான். ஆனால், உண்மையில் மனிதன் அறிவுக்கு எட்டியது எல்லாம்
சரியாக இருக்கலாம் அல்லது தவறாக இருக்கலாம் அல்லது சரியென நினைத்து தவறான பாதைக்கு
செல்லலாம் அல்லது தவறு என நினைத்து சரியானதை கைவிடலாம். எனவே இங்கு மனிதன் உருவாக்கி
வைத்துள்ள கோட்பாடுகள் அனைத்தும் அவன் அறிவுக்கு எட்டியவரை அவனை பொருத்தவரையில் சரியாகவும்,
சில விசயங்கள் தவறாகவும் இருக்கிறது. ஆனால், இத்தகைய விசயங்கள் எல்லாம் உண்மையில் சரியானதா
அல்லது தவறானதா என்பது எல்லாம் இயற்கைக்கு மட்டும்தான் தெரியும். அதனால், நாம் இப்போது
பிரபஞ்சம் தோன்றியது, உயிரினங்கள் தோன்றியது பற்றி எல்லாம் பார்க்காமல், உயிரினங்கள்
தோன்றியதற்கு பிறகு ஏற்பட்ட மாற்றங்களையும், வளர்ச்சியையும் மட்டும் பார்ப்போம் ஏனெனில்,
இவைகள் தான் மனிதன் அறிவுக்கு எட்டியவரை அவனை பொருத்தவரை ஒரளவு உறுதிபடுத்தப்பட்ட உண்மைகள்
ஆகும்.
உயிரினங்கள் தோன்றிவிட்டது,
ஆனால், அந்த உயிரினங்கள் அனைத்தும் இந்த பூமியில் உயிர் பிழைத்து இருக்க வேண்டும் அல்லவா?,
இயற்கை நியதியின் படி, எந்த உயிரினம் திறமையாக செயல்படுகிறதோ, அதாவது, தப்பி பிழைத்து
வாழ என்னென்ன திறமைகள் தேவைபடுகிறதோ அதை எல்லாம் எத்தகைய உயிரினம் பெற்றுள்ளதோ அத்தகையது
தான் தப்பி பிழைத்து வாழ முடியும் என்பது இயற்கை நியதி, அதன்படி, தப்பி பிழைத்தலுக்கு
மிகவும் தேவையான திறமை என்பது கற்றல். கற்றல் என்பதுதான் ஓர் உயிர் தன்னை மற்ற உயிரிகளிடமிருந்து
பாதுகாத்துகொள்ள தேவைப்படும் மிகபெரிய திறமை, அதாவது, ஓர் உயிரினத்திற்கு பசிக்கிறது
என்று வைத்து கொள்வோம், முதலில் அந்த உயிரினம் தனக்கு பசிக்கிறது என்பதை உணர்ந்து,
உணர்ந்த பின்பு எதனால், தன் பசி தீரும் என உணர்ந்து, உணர்ந்ததோடு மட்டும் இல்லாமல்,
தன்னுடைய பசியை தீர்த்துகொள்ளும், மேலும் அதேப்போல் பசி என்ற உணர்வு எப்போது எல்லாம்
ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் மீண்டும் தான் உணர்ந்த தனக்கு எதனால் பசி தீர்ந்ததோ அந்த
செயலை செய்கின்றது. இதேபோல்தான் மற்ற எல்லா செயல்களையும் செய்கிறது, அதாவது மற்ற உயிரினங்களிடமிருந்து
தன்னை பாதுகாத்து கொள்ளவும் இப்படி ஒவ்வொன்றாக ஆராய்ந்து அதில் தோல்வியை தழுவி, பின்பு
ஒரு படிப்பினையை பெற்று தனக்கு தேவையானதை பூர்த்தி செய்து கொள்கிறது இந்த நிகழ்விற்க்கு
பெயர்தான் கற்றல் என்பது. இந்த கற்றல் என்பது தான் ஒவ்வொரு உயிரினத்திற்கும், தான்
இந்த உலகத்தில் தப்பி பிழைத்து வாழ மிக தேவையான திறமையாகும்.
இப்படிபட்ட கற்றல் என்ற திறமையானது தனியொரு உயிரினம்
மட்டும் பிழைத்து வாழ தனக்கு மட்டும் தேவையான ஒன்று அல்ல. அப்படிபட்ட கற்றல் என்பது
தான், எந்த உயிரினத்திடமிருந்து தப்பி வாழ வேண்டுமோ அதனிடம் வெளிப்படுத்த வேண்டும்
அல்லது தன் தப்பி பிழைத்து வாழ இருக்கும் உரிமையை தக்கவைத்துக்கொள்ள தன் தப்பி பிழைத்து
வாழும் உரிமையை பறிக்கும் நிலைக்கு மற்றொரு தப்பி பிழைத்து வாழ நினைக்கும் உயிரினத்திடமும்
சொல்ல வேண்டும் அல்லது உணர்த்த வேண்டும். அதாவது, ஏதாவது ஒரு நிகழ்வின் மூலம் தன் வேண்டுகோளை,
தன் அதிகாரத்தை மற்ற உயிரினத்திடம் உணர்த்த வேண்டும் அல்லது பகிர்ந்துகொள்ள வேண்டும்.
அதேபோல், தானும் மற்றொரு உயிரினம் உணர்த்தும் விசயத்தை உணர்ந்து கொள்ளவேண்டும் அதாவது,
தாங்கள் கற்றுகொண்ட விசயத்தை தன் கற்றலை வெளிபடுத்த வேண்டும் அப்படி வெளிபடுத்த வேண்டும்
எனில் தன் கற்றலை அதாவது தகவலை பரிமாறிக்கொள்ள வேண்டும், அப்படி தகவலை பரிமாறிகொண்டால்தான்
ஏதாவது ஒரு உயிரினம் தப்பி பிழைத்து வாழ முடியும் அல்லது இரண்டுமே தப்பி பிழைத்து வாழ
வேண்டும் என்றால் அங்கே கற்றல் என்பது அவசியமாகிறது. கற்றல் எப்படி அவசியமானதோ அதைவிட
அவசியமானது அந்த கற்றலை வெளிபடுத்தும் தகவல் பரிமாற்றம் என்பது மிக அவசியமானது அப்படிபட்ட
கற்றல் என்பதும், தகவல் பரிமாற்றம் என்பதும் இருந்தால்தான் எந்த உயிரினமும் உலகில்
தப்பிபிழைத்து வாழமுடியும். தான் தப்பி பிழைத்து வாழ்வதோடு மட்டும் இல்லாமல் தன்னை
சார்ந்த இனத்தையும், தன் சந்ததியையும் தப்பி பிழைத்து வாழவைக்க முடியும். அதாவது, தன்
இனத்தையும், தன் சந்ததியையும் தப்பி பிழைத்து வாழ வைக்க வேண்டும் என்றால், முதலில்
தான் உணர்ந்த, தான் கற்ற படிப்பினைகள், தன் திறமைகள் அதாவது எந்த செயல்கள் செய்தால்
தப்பி பிழைத்து வாழ முடியுமோ அத்தகையதை எப்படி செய்தால் பிழைக்க முடியுமோ அதை எல்லாம் தன் இனத்திற்கும்,
தன் சந்ததிக்கும் சொல்லிகொடுக்க வேண்டும் அதாவது தான் கற்ற, பெற்ற ஒரு தகவலை தன்னை
சார்ந்த இனத்திற்கும், தன் சந்ததிக்கும் பரிமாற வேண்டும். அப்படி தகவல்கள் பரிமாறிகொண்டால்
ஒழிய, ஓர் இனம் அல்லது சந்ததியானது தொடர்ந்து தப்பி பிழைத்து வாழ முடியும். இல்லையெனில்,
எந்த இனம், எந்த சந்ததி இதையெல்லாம் மிக சரியாக செய்கிறதோ அந்த இனமானது, அந்த சந்ததியானது
இப்படிபட்ட செயல்களை செய்யாமல் இருக்கும் இனத்தின் தப்பி பிழைத்து வாழ இருக்கும் உரிமையை
பறித்துகொண்டது, தான் தப்பி பிழைத்து வாழும் அல்லது அந்த இனத்தையும் தப்பி பிழைக்க
வைத்து தனக்கு கீழ் அடிமையாய் வைத்து கொள்ளும். எனவேதான் மனித இனமானது தான் தப்பி பிழைத்து
வாழ இருக்கும் வழிகளையெல்லாம் கண்டுபிடித்து அதை மிக திறமையாக கையாண்டு தன் இனத்திற்கும்,
தன் சந்ததிக்கும் தகவலை பரிமாற்றி கொண்டு, மற்ற இனத்தின் தப்பி பிழைத்து வாழ இருக்கும்
உரிமையை பறித்துகொண்டது. அதுமட்டும் இல்லாமல், மற்ற இனத்தை அடிமையாகவும் அடக்கி வைத்துள்ளது.
இவ்வளவுதான் மனிதன் செய்த சாதனை, ஆக இப்படித்தான் உயிரினங்கள் எல்லாம் தன் கற்றலை வளர்த்துகொண்டு,
தகவல் தொடர்புகளை சரியாக கையாண்டு தன் இனத்தினை மிக சரியாக வழி நடத்தி, தப்பி பிழைத்து
வாழவைத்து கொண்டிருக்கிறது. இதில் மனித இனம் என்று மட்டும் அல்ல, மற்ற உயிரினங்களிற்குள்ளும்
கற்றல், தகவல் தொடர்பு என்பதும் இருக்கிறது. ஆனால், என்ன அவையெல்லாம் போதுமான அளவுமட்டும்,
அதாவது, தப்பி பிழைத்து உயிர் வாழ போதுமான அளவுமட்டும் தன் கற்றலையும், தகவல் பரிமாற்றத்தையும்
பயன்படுத்திகொண்டிருக்கின்றன. இதன்மூலம் தகவல் தொடர்பு என்பது தான் எந்தவொரு இனத்திற்கும்
மிக அவசியமான ஒன்று. ஏனெனில், கற்றல் இருந்தால்தான் தன் இனத்தையும், தன் சந்ததியையும்
தன் விருப்பத்திற்கு அல்லது தன் தேவைக்கு ஏற்ப வாழவைக்க முடியும்.
தகவல் பரிமாற்றமும் சமுதாயமும்
மனித இனம் என்பது சற்றே நாகரீகம் அடைந்த இனம் என
அவனால் நம்ப படுகிறது. ஏனெனில், அவன் சிந்திக்க கற்றுகொண்டான். அதனால், அவன் மற்ற எந்த
உயிரினத்தை விட, அதாவது மற்ற தப்பி பிழைத்து வாழ நினைக்கும் உயிரினத்தின் உரிமையை விட
அவன் சற்றல்ல, கொஞ்சம் அதிகமாகவே உரிமையை எடுத்துகொண்டான். எனவே இப்போது அவன் இந்த
உலகில் தப்பி பிழைத்து வாழ ஓரளவிற்கு போராட தேவையில்லை. ஏனெனில், அப்படிபட்ட நிலையை
அவன், மற்ற உயிரினங்களை எல்லாம் விலக்கிவைத்ததோடு மட்டும் இல்லாமல் அவனும் விலகி, மனித
இனம் மட்டும் வாழும் ஓர் சமுதாயத்தை கட்டமைத்து கொண்டான். இதுபோல்தான், அவன் சிந்திக்க
ஆரம்பித்த உடன் இப்படிபட்ட சமுதாயத்தை கட்டமைக்க முற்பட்டு அப்படிபட்ட பாதுகாப்பான
சமுதாயத்தை கட்டமைக்க மிக சுலபமான வழிகளையெல்லாம் கண்டறிந்து மனித இனமானது தன் சமுதாயத்தை
கட்டமைத்து, அப்படிபட்ட சமுதாயத்தில் எல்லாரும், எல்லாரையும் சார்ந்து வாழும்மாதிரி
கட்டமைத்துகொண்டான். அப்படி கட்டமைத்து கொண்டான் என்பதை விட, அப்படி மட்டும் தான் கட்டமைக்க
முடியும் என்பதால் அப்படிபட்ட சமுதாயத்தை கட்டமைத்து கொண்டான். அப்படிபட்ட சமுதாயத்தை
ஒருவர் மற்றொருவர் உதவியின்றி கண்டிப்பாக வாழ முடியாது என்ற நிலை உருவானது, இப்படிபட்ட
நிலையானது இயற்கை விதி, அதனால் மனித இனத்தால் எதுவும் செய்ய முடியவில்லை அதனால் இயற்கை
நியதிப்படியேத்தான், தன் சமுகத்தை கட்டமைத்து. மேலும், அந்த சமுதாயத்தில் தகவல்கள்
எல்லாம், அதாவது தன் இனம் பாதுகாப்பாக வாழ தாங்கள் கற்றுகொண்ட திறமைகள் அனைத்தையும்
சமுகத்தில் எல்லாருக்கும் கற்றுகொடுக்கபட்டது. எப்படி கற்றுகொடுக்கப்பட்டது எனில்,
தான் கற்றுகொண்ட தகவல்களை எல்லாம் ஒருவருக்கொருவரும், ஒட்டுமொத்த சமுதாயத்திலும் பரிமாறிகொண்டால்தான்,
தன் இனம் பாதுகாப்பாக வாழகூடிய சூழ் நிலை இருந்ததால் மனித இனம் அப்படியே உருவாக்கிகொண்டது.
இதில் ஒவ்வொரு தனிநபரின் பங்கும் மிகமிக அவசியம் என்பதால், எல்லாரும் தாங்கள் கற்றுக்கொண்ட
மற்றும் பெற்றுகொண்ட தகவல்கள் எல்லாம் பரிமாறிகொள்ளப்பட்டு எல்லாரும் ஒற்றுமையாக சேர்ந்துவாழும்
பாதுகாப்பான ஓர் சமுதாய கட்டமைப்பை உருவாக்கிகொண்டது மனித இனம். அப்படிப்பட்ட சமுதாய
கட்டமைப்பில் மிகமுக்கியமான திறமையான கற்றல் அதாவது, தகவல் பரிமாற்றம் என்பது எல்லாருக்கும்
கற்றுகொடுக்கப்பட்டது. அப்படி கற்றுகொடுக்கபட்டு தன் இனத்திற்கு, தான் கட்டமைத்த சமுதாயத்திற்கு,
என்னென்ன தேவைகள் வேண்டுமோ, அவையனைத்தையும் எல்லாரலும் சரியாக கையாளபட்டு, சமமான சமுகமாக
தங்களை மனித இனம் உருவாக்கி கொண்டது. அப்படிப்பட்ட சமுக கட்டமைப்பில் ஒவ்வொருவரும்
கற்றலும் பெற்றிருந்தார்கள், தான் கற்றதை மற்றவரிடத்தில் பரிமாறிக்கொள்வதிலும் மிக
சரியாக இருந்தார்கள். ஏனெனில், அப்போது மனித இனம் கட்டமைத்து சமுதாயமானது, சமத்துவம்,
சகோதரத்துவம் மற்றும் சுதந்திரம் என எல்லாம், எல்லாருக்கும் கிடைத்தது. மேலும், எப்போது
இப்படிபட்ட சமுக கட்டமைப்பானது இல்லாமல் போகிறதோ அப்போது மற்ற உயிரினத்துடன் போட்டிபோட்டு
உயிர் பிழைத்து வாழ இருக்கும் உரிமையை இழக்க நேரிடும் என்பதை நன்கு உணர்ந்திருந்ததால்,
அப்படிப்பட்ட சமுதாயத்தை மிக வழுவாக கட்டமைத்துகொண்டது மனித இனம். இப்படிப்பட்ட மனிதன்
சேர்ந்து வாழ்ந்து கொண்டிருந்த சமுதாயத்தில் தகவல் பரிமாற்றம் என்ற திறமைத்தான் சமுகத்தை
ஒன்றினைத்து பாதுகாத்துகொண்டிருந்தது என்றால் அது மிகையாகாது.
மொழியின் தேவை மற்றும் மொழியின் தோற்றம்
தன் சமுதாயத்தை
மிகச் சரியான திட்டமிடலுடன் சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரத்தோடு, பாதுகாப்பாக
கட்டமைத்திருந்த மனித இனமானது, அதை, மேலும் எளிய முறையில் விரிவுபடுத்த வேண்டிய கட்டாயத்தால்
புதிய கற்றல்களை தேடிப்போனது அல்லது அப்படிப்பட்ட சூழ்நிலையானது, ஒன்றினைந்த சமுதாயத்தால்,
தங்களுக்கே தெரியாமல் அப்படிபட்ட தேவையை உருவாக்கிகொண்டது. அப்படிபட்ட சமுதாயத்தை எளியமுறையில்
விரிவுபடுத்த நினைத்தபோது அதற்கு தேவையான திறமைகளை தேட முற்பட்டது. அதன் விளைவாய்,
தன் சமுதாயத்தை சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரத்துடன் பாதுகாப்பாக கட்டமைத்துள்ளதற்கு
காரணமான தகவல் பரிமாற்றத்தில் தன் திறமையை எப்படி வளர்த்து கொள்வது என்பதை ஆராய ஆரம்பித்தது,
மேலும், மிக எளிய முறையில் எப்படி தகவல்களை பரிமாறிக்கொள்வது என தேட ஆரம்பித்து, அதனடிப்படையில்,
சைகையில் தன் தகவல்களை பரிமாறி கொண்டிருந்த மனித இனம், ஒலி எழுப்பி தன் தகவல்களை பரிமாறிக்கொள்ள
தொடங்கியது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு செயலுக்கும், ஒவ்வொரு ஒலியை தேர்ந்தெடுத்து,
உருவாக்கி தன் தகவல்களை பரிமாறிக்கொள்ள முயற்சித்து அதுவே, பல படிப்பினைகளுக்கு பின்பு,
வளர்ச்சியடைய வைத்து ஒரு கருவி உருவாக்கப்பட்டது. அந்த ஒலியை வைத்து புரிந்துகொள்ளும்
அந்த கருவிக்கு அல்லது தான் சமுதாயத்தில் மற்றவருடன் தகவல்களை பரிமாறிகொள்ளும் ஒலியெலுப்பும்
முறையை வடிவமைத்து மொழி என்ற கருவி உருவாக்கப்பட்டது. அப்படிப்பட்ட மொழி என்ற முறையை
வைத்து தன் கற்றலையும், தன் படிப்பினைகளையும் மற்றொருவருடன் அல்லது சமுதாயத்துடன் தகவல்களை
பரிமாறிக்கொண்டது. மேலும், இத்தகைய ஓர் முறையை ஒட்டுமொத்த சமுதாயமும் ஏற்றுக்கொண்டு
அனைவருக்கும் தன் கற்றலையும், படிபினையான தகவல்களையும் எப்படி மொழி என்ற வடிவத்தில்
அதாவது, ஒலியெழுப்பி சமுதாயத்தின் மற்றவர்களுடன் பரிமாறிகொள்வது எப்படி, என்று ஒவ்வொருவருக்கும்
கற்றுக்கொடுக்கப்பட்டது. அதனடிப்படையில் மொழி என்ற கருவியை பயன்படுத்தி தன் சமுகத்தை
மேலும் பாதுகாப்பாகவும், சமுதாயத்திற்கு தேவையான எல்லாரையும் உயிர்பிழைத்து வாழ வைக்க
வேண்டிய எல்லா திறமைகளையும், கற்றல்களையும் பரிமாறிக்கொண்டு ஓர் சுதந்திரமான, சமத்துவமான,
சகோதரத்துவமான சமுதாயத்தை கட்டமைத்துக்கொண்டது. அதனடிப்படையில் தன் சமுகத்தின் தேவைகளுக்கு
என்ன எல்லாம் தேவைபடுகிறதோ, அதையெல்லாம் எப்படி அடைவது எனவும், எப்படி அடையலாம் எனவும்,
எல்லாருக்கும் கற்றுக்கொடுக்கப்பட்டது. அதன்மூலம் ஓர் வலிமையான சமுதாயத்தை மனித இனம்
கட்டமைத்துக்கொண்டது. மேலும், இப்படிபட்ட மொழி என்ற கருவியால், தன் கற்றலை பரிமாறிக்கொள்ள
நினைப்பவர், எல்லாரிடமும் பரிமாறிக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை, அதாவது, யாரவது
ஒருவரிடம் தான் கற்ற தகவலை பரிமாறிக்கொண்டால் கூட, போதுமானது. அந்த தகவலை பெற்ற நபர்
சமுதாயத்தின் மற்றவர்களுக்கு தகவலை பரிமாறிவிடுவர். இப்படியே, இறந்தகாலத்தில் பெற்ற
தகவல்கள் எல்லாம் மொழி என்ற கருவியின் துணைக்கொண்டு, நிகழ்கால சமுதாயத்திற்கும், தன்
இனத்தை பாதுகாப்பாக வாழவைக்க கற்றுகொடுக்கபட்டது. அதேப்போல் அத்தகைய கற்றல்கள் எல்லாம்
மொழியின் துணைக்கொண்டு எதிர்கால சமுதாயத்திற்கும் பரிமாறிகொள்ளும் மாதிரியும் உருவாக்கபட்டது.
இதில் இடைப்பட்ட எந்த காலத்திலாவது, மொழி என்ற கருவியின் உதவியுடனோ அல்லது சமுதாயத்திற்கு
மிக அவசியமான கற்றலோ, படிப்பினையின் தகவலையோ பரிமாறிகொள்ளவில்லை என்றால் சமுகத்தின்
கட்டமைப்பானது சரியாக இயங்க முடியாது. எனவே, கற்றல் என்ற திறமையினாலும், கற்ற தகவல்களை
பரிமாறுவது என்பது மிக அவசியமாகும். ஏனெனில், கூட்டமாக வாழும் சமுதாயத்தில் தனியொரு
நபரால் மட்டும் எல்லா கற்றல்களையும், படிப்பினைகளையும் அறிந்துகொள்ள முடியாது. எனவே,
சமுகத்தில் உள்ள பலபேரின் கற்றல்களையும் அல்லது பலபேர் அறிந்துகொண்ட தகவல்களை பரிமாறிகொண்டாலொழிய
ஓர் வலிமையான, பாதுகாப்பான, சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் உடைய சமுகத்தை உருவாக்கமுடியாது.
இப்படி மொழி என்ற கருவியானது இருந்தவரை, சமுதாயத்தில் எந்தவித பாகுபாடும், பிரிவினையும்
உருவாகவில்லை. ஏனெனில், எல்லாருக்கும் மொழி என்ற கருவியை அதாவது பேச தெரியும். அதேபோல
மற்றவர்கள் பேசுவதையும் புரிந்துகொள்ளமுடியும். எனவே, மொழியைவைத்து எந்தவித பிரிவினையும்
ஏற்படவில்லை. அதாவது, பேசி மட்டும் தன் தகவல்களை பறிமாறிக்கொண்டிருந்த போது மட்டும்.
அதேபோல் பேசி கொண்டிருந்தபோது சமுகத்தில் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் நிலவித்தான்
கொண்டிருந்தது.
மொழியும் சமுதாயமும்
மொழி என்பது சமுதாயத்திற்கு இன்றியமையாத ஓர் திறமையாகும்.
அப்படிபட்ட திறமை இருந்தால்தான், சமுகத்தின் தனி நபர் கூட, தான் உயிர்வாழ தனக்கு தேவையானதை
தகவல்தொடர்பின் மூலம் பூர்த்தி செய்துகொள்ளமுடியும். அப்படி இல்லையெனில் எந்தவொரு தனி
நபர் கூட, தனக்கு தேவையானதை தான் சார்ந்து வாழும் சமுதாயத்தில் இருந்து மிக எளிதாக
பெற்றுக்கொள்ளமுடியாது. அதேபோல், மற்றவர்களுக்கும் கொடுக்கமுடியாது. எனவே, அப்படிபட்ட
வேலையை செய்வது என்பது மொழி என்ற கருவிதான் ஏனெனில், மொழியை பயன்படுத்திதான், தன் சமுகத்தில்
தனக்கு தேவையானதை மட்டுமல்ல, தான் சார்ந்துவாழும் மற்றவருக்கு புரியவைத்து, அதன்மூலம்
தனக்கு தேவையானதை பெற்றுகொள்ளமுடியும். இப்படி, தனக்கு வேண்டியதை மட்டுமல்ல, தனக்கு
தெரிந்ததை தான் வாழ தேவையான திறமைகள் எல்லாம் தன்னிடமிருந்து மற்றவர்களுக்கும், மற்றவர்களிடமிருந்து
தனக்கும் பரிமாறிக்கொண்டால் தான் திறமைகளை வளர்த்துக் கொள்ளமுடியும். அப்படிபட்ட திறமைகளை
வளர்த்துகொண்டால் மட்டும்தான், தான் சமுகத்தில் பாதுகாப்பாகவும், தனக்கு வேண்டிய தன்
தேவைகளையும், மற்றவரின் தேவைகளையும் பூர்த்தி செய்துகொண்டு வாழ்வதோடு மட்டுமில்லாமல்
வழக்கம்போல ஓர் பாதுகாப்பான, சுதந்திரமான, சமத்துவமுடைய, சகோதரத்துவமான சமுதாயத்தை
சரியாக கட்டமைக்கமுடியும். அப்படிபட்ட மொழி என்ற திறமையை வளர்த்து கொள்ளவில்லை என்றால்,
தன் தேவைகளுக்காக எப்பொழுதும் மற்றவரை சார்ந்து மட்டும்தான் வாழ வேண்டும் என்ற நிலை
வந்துவிடும். சமுதாயத்தில் எல்லாரும் ஒருவரையொருவர் சார்ந்துதான் வாழ்கிறார்கள் ஆனால்,
இப்படிபட்ட திறமைகளை வளர்த்து கொள்ளவில்லை என்றால், சமுகத்தில் பிரிவினை உண்டாகும்.
எப்படியெனில், எப்போது சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் என்பது கொஞ்சம்கொஞ்சமாக
மாற்றமடைந்து, மனிதனை அல்லது சமுதாயத்தை சுயநலம் தொற்றிக்கொள்கிறதோ அப்போது, கண்டிப்பாக
இதுபோன்ற, தன் நிலையை வெளிபடுத்தும் திறமைகளை அதாவது, மொழிதிறனை வளர்த்துக்கொள்ளவில்லை
என்றால், கண்டிப்பாக பாகுபாடு பார்க்கபடும். ஆனால், ஓர் உண்மையான, முழுமையான கற்றல்
உள்ள சமுதாயமானது என்றைக்கும் சமுக பாதுகாப்பு, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்
என்ற எல்லை மீறி போகாது, ஆனால் அப்படி கற்றலில் மாறுபாடு இருந்தால், தீயவற்றை கற்றார்கள்
என்றாலும், அது எல்லாரிடத்திலும் பரிமாறிக்கொள்ளபடும் போது தீய விளைவினை ஏற்படுத்தும்.
எனவே, மொழி என்பது வெறும் தகவல்களை மட்டும் சுமந்து செல்லும் ஒரு கருவி மட்டுமே அதனால்,
நன்மை தரும் தகவல் என்றோ, தீமை தரும் தகவல் என்றோ பாகுபாடு இல்லாமல் எல்லாவித தகவலையும்
எடுத்துசெல்லும். எனவே, மொழி என்பது சமுதாயத்திற்கு மிகமிக அவசியமான ஒன்றாகும். மொழி
இல்லை என்றால் சமுதாயம் இல்லை.
மொழியும் குறியீடுகளும் அல்லது குறியீட்டு கருவி
மொழி என்ற கருவி இல்லை என்றால், சமுதாயத்தில் தகவல்
தொடர்பு என்ற ஒன்றே இல்லாமல் போகும். எனவே, மொழி என்பது மிகவும் இன்றியமையாத கருவியாக
சமுதாயத்திற்கு விளங்குகிறது. ஆனால், அப்படிபட்ட மொழி என்ற திறமையை, அதாவது ஒலி எழுப்பி
பேசும் திறமையை கற்றிருந்தால் மட்டும் போதுமானதா என்றால் இல்லை எனலாம். ஏனெனில், மொழி
இருக்கிறது ஆனால், அந்த மொழிக்கு வெறும் பேச்சு மட்டும் இருந்து என்ன பயன், ஏனெனில்,
பேசும் நிமிடத்திலேயே காற்றோடு காற்றாய் கரைந்து போகும் பேச்சு என்ற தகவல் பரிமாற்ற
முறையானது, நிகழ்காலத்தில் வேண்டுமானால் சாத்தியமாகவும், எளியதாகவும் இருக்கலாம். ஆனால்,
எதிர்காலத்திற்கு எப்படி அத்தகைய பேச்சை மிக எளிதாக எப்படி கொண்டு செல்லமுடியும். பின்
எப்படி மொழி என்ற ஒன்றை பேச்சு என்ற முறையை மட்டும் வைத்துகொண்டு தான் கற்ற தகவல்களையும்,
பெற்ற படிப்பினைகளையும் பரிமாறிகொள்ளமுடியும். அதனால், மொழி என்ற கருவியில் பேச்சு
மட்டும் தகவல் பரிமாற்றத்திற்கு போதுமானதாக இல்லை என்ற காரணத்தால், தான் பேசும் மொழி
என்ற கருவிக்கு, தான் புரிந்து கொள்ளும் மாதிரியும், மற்றவர்கள் புரிந்துக்கொள்ளும்மாதிரியும்
குறியீடு ஏதாவது உணடாக்கினால், இன்னும் தமது தகவல் பரிமாற்ற திறமை மூலம் தன் கற்றலும்,
பெற்றலும் இன்னும் முன்னேறும் அல்லவா? அதைதான், மனித சமுதாயமானது செய்தது தன் திறமையை
இன்னும் பல கற்றலின் மூலம், படிப்பினைகளின் மூலம் மிக எளியதாக மாற்றும் வழிகளை தேடியது.
அதன்படி தான் பேசும் பேச்சுக்கு ஏற்ப குறீயீடுகளை கொடுத்து, தான் சொல்ல நினைக்கும்,
பேச நினைக்கும், பரிமாற நினைக்கும் தகவல்களை எப்படி குறியீடாக மாற்றுவது என ஆராய்ந்து
அப்படிபட்ட குறியீடுகளை தான் சொல்லவரும் தகவல்களுக்கு ஏற்ப உருவாக்கியும், அப்படிபட்ட
தகவலை எப்படி குறியீடாக மாற்றுவது என மற்றவர்களுக்கு சொல்லியும், மேலும், அப்படி உருவாக்கபட்ட
குறியீட்டில் இருந்து, எப்படி தான் தகவல்களை பெறுவது என்பதையும் அதேபோல், மற்றவர்கள்
சொல்லும் தகவலை குறியீடுகளாக உருவாக்குவது எனவும் ஆராய்ந்து பல படிப்பினைகளுக்கு பின்பு
கற்றுக்கொண்டு தகவல்தொடர்பில் புதிய மாற்றத்தை உருவாக்கியது. அதன்படி, மொழி என்ற கருவிக்கு
இருந்து வந்த பேசும் முறையை, மேலும் விரிவு படுத்தி எழுதுதல், படித்தல் என்று தன் திறமைகளை
வளர்த்துகொண்டது மனித சமுதாயம். அதன்படி, தான் சொல்லவரும் கருத்துகளை, தான் கற்றுக்கொண்ட
விசயங்களை எல்லாம், தான் இல்லையென்றாலும், தான் உருவாக்கிவைத்துள்ள குறியீட்டின் மூலம்,
தன் தேவை இல்லாமலே மற்றவர்கள் படித்து தெரிந்து கொள்ளும்மாதிரியும், அதேப்போல் மற்றவர்கள்
தன்னிடம் சொல்லவரும் கருத்துகளை தானும், அவர்கள் இல்லாமலேயே, அவர்கள் குறியீட்டின்
மூலம் தான் படித்து தெரிந்து கொள்ளும் மாதிரியும் உருவாக்கபட்டது. இப்படி, ஒருவர் இல்லாமலேயே
அவர் கூறும் கருத்தை மற்றவர்கள் தெரிந்துகொள்ளும் மாதிரியும், அதேபோல், தான் சொல்லும்
கருத்தை, தான் இல்லாமல் மற்றவருக்கு தெரியபடுத்தும் விதம் தகவல் பரிமாற்றத்தில் மேலும்
பல முன்னேற்றம் ஏற்பட்டது. இதனால், சமுதாயத்தில் தகவல் பரிமாற்றம் என்பது மிக விரைவாகவும்,
தெளிவாகவும், உண்மையாகவும் எல்லாருக்கும் போய் சேர்ந்தது. இதன் மூலம், தன் திறமைகள்
எல்லாம் அந்த சமுதாயமானது, மேலும் மெருகேற்றிக்கொண்டு, அப்போதும் சுதந்திரத்துடன்,
சமத்துவத்துடன், சகோதரத்துவம் உடனும் பாதுகாப்பாக வாழ்ந்து வந்தது.
தகவல் பரிமாற்றம் என்ற கருவி, கல்வியென மாற்றமடைதல்
தகவல் பரிமாற்றம் என்ற கருவியானது, உடல் அசைவு,
சைகையிலிருந்து பேச்சு வடிவிலும் பின்பு, எழுத்து வடிவிலும் படிப்படியாக வளர்ச்சியடைந்து,
எழுதுதல் மற்றும் படித்தல் என்ற முறைக்கு மாறிவிட்டது. சமுதாயத்தின் பாதுகாப்பான சுதந்திரமான,
சமத்துவமான, சகோதரத்துவமான கட்டமைப்பை உருவாக்க தகவல் தொடர்பு என்பது மிக முக்கியமானது.
அதில் பழங்கால சமுதாயத்தில் பேச்சு மட்டும் தகவல் தொடர்புக்கு போதும் என்று இருந்து
நிலை. காலப்போக்கில் எழுதவும், படிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும் என்ற நிலை உருவாக்கபட்டது.
ஏனெனில், அப்போதுதான் சமுதாயத்தில் மிக தெளிவாகவும், மிக எளிமையாகவும் தகவல்களை பரிமாறிக்கொள்ளமுடியும்
என்ற நிலை உருவானது. அப்படித்தான் நல்ல பேச வேண்டும் என்றால் நிறைய தகவல்கள், செவி
வழியாக கேட்டு இருக்க வேண்டும் என்ற நிலை உருவானது. நாளடைவில், பேச்சு குறைந்து மிக
எளிய தகவல் பரிமாற்ற வழியான எழுதும் முறை, படிக்கும் முறை என்ற நிலை வந்தவுடன் நிறைய
பேச வேண்டும் என்றால், படிக்கவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் என்ற நிலை உருவானது.
எனவே, ஒரு பாதுகாப்பான, சமதர்ம சமுதாயத்திற்கு, பேச்சு மற்றும் எழுதவும், படிக்கவும்
தெரிந்து இருக்க வேண்டும் என்ற நிலை உருவானது, ஆனால் அப்பொழுதும் பேச்சு என்பது எல்லாருக்கும்
பொதுவாகவும், எளியமுறையிலும் இருந்து. அதனால் சமுகத்தில் எல்லாருக்கும் மிக சுலபமாக
தகவல் பரிமாற்றம் நிகழ்ந்தது. அப்போதும் வெறும் வாய் வழி - செவி வழி கற்றலின் மூலம்
மட்டும், சமுதாயமானது தனது தேவைகளை பூர்த்தி செய்துகொண்டது. ஆனால், அதை எப்போது, இன்னும்
எளியதாக மாற்றலாம் என்ற எண்ணம் மனித இனத்திற்கு ஏற்பட்டதோ, அப்போதே சமுகத்தில் தகவல்
தொடர்பில் வீழ்ச்சி ஏற்பட தொடங்கியது. எப்படி எனில், வாய் வழி - செவி வழி கற்றலில்
எத்தனைதான் உண்மைகள் இருந்தாலும் அது பழையதாக இருப்பதால் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக்கொள்ள
படவில்லை ஏனெனில், வாய்வழி - செவிவழி கற்றலுக்கு பதில் புதியதாக எழுத்து வழி படித்து
உணர்தல் என்ற நிலை வந்த பிறகு, அதுவரைக்கும் எல்லாருக்கும் பொதுவாக இருந்து வந்த கற்றல்
என்பது, படிபடியாக மறையத்தொடங்கியது. மறையத்தொடங்கியது மட்டும் இல்லாமல் நம்பகத்தன்மையையும்
இழந்துகொண்டே வந்தது. அதாவது, எழுதிவைத்துள்ளது மட்டும்தான் உண்மை எனவும், அப்படி எழுதிவைத்துள்ளதை
படித்து சொல்பவர்களின் கருத்துக்கள்தான் உண்மை என்ற மாயை உருவாகிகொண்டிருந்தது. அதேபோல
இப்படிபட்ட எழுதும், படிக்கும் திறமையானது சமுகத்தின் அனைவருக்கும் கிடைக்கப்பெறவில்லை.
ஏனெனில், ஆரம்பகாலத்தில் வாய்வழி - செவிவழி கற்றலே போதுமானதாக இருந்தது. நாளடைவில்
எழுதவும், படிக்கவும் தெரியாத அதாவது அந்த திறமைகள வளர்த்து கொள்ளாத எல்லாருக்கும்,
சமுகத்தின் தகவல் தொடர்பில் சரியான பரிமாற்றம் இல்லாமல் போய்விட்டது. இருந்தாலும்,
எழுத்து என்பதே அல்லது படிப்பு என்பதே பெரிய செயலாக தெரியவில்லை. ஏனெனில் அப்போதும்
சமுகத்திற்கு தேவையான அனைத்தும் கிடைத்துவந்தது. ஏனெனில், மற்றவர்களின் கற்றல் என்பது
மற்ற கல்லாதவர்களுக்கு உதவதான் என்ற நிலை இருந்து. எனவே, அப்போதும் வழக்கமான சுதந்திரமான,
பாதுகாப்பான ஒரு சமுதாயம் இருந்தது.
கல்வி என்ற எதிர்புரட்சி
மனித சமுதாயம் எப்போது வரையில், பேச்சு முறையில்
மட்டும் தகவல் பரிமாற்றங்களை தங்களுக்குள் நிகழ்த்தி கொண்டுருந்ததோ அப்போது
வரையில், மட்டும்தான் எந்தவித பிரிவினைக்கும் இடம் கொடுக்காமல் சமுதாயத்திற்கு தேவையான
படிப்பினைகள் எல்லாம் எந்தவித வேறுபாடும் பார்க்காமல் பரிமாறிக்கொள்ளப்பட்டிருந்தது.
அதேபோல், சமுதாயத்தில் சிலர் பல விசயங்களை கற்றுகொண்டிருக்கலாம், தெரிந்துகொண்டிருக்கலாம்
ஆனால், அப்போதும் அதிகமாக கற்றவர், அதிகமான விசயம் தெரிந்தவர் என்ற எந்த வேறுபாடும்
பார்க்கபடவில்லை, அதேபோல் குறைந்த விசயங்கள் தெரிந்தவர்களும், எந்தவித வேறுபாடும் பார்க்காமல்
சமுதாயத்தில் சமத்துவம், சகோதரத்துவம், பாதுகாப்பும் எல்லாருக்கும் கிடைத்தது. ஏனெனில்,
தனி நபரின் கற்றல் என்பது ஒட்டுமொத்த சமுதாயத்தின் நலன் சார்ந்தவையாக இருந்தது. அதன்படி,
சமுதாயத்திற்கு தேவையான கற்றல்களை பெற்றிருந்தவர்கள் அல்லது தெரிந்தவர்கள், அல்லது
உருவாக்கியவர்கள் எல்லாம் அறிவாளியாக இருந்தனர். ஆனால், அறிவாளி என்பதற்காகவும், அதிகம்
கற்றவர் என்பதற்காகவும் அவர் மற்றவரை காட்டிலும் உயர்ந்தவர் என்றோ அல்லது மற்றவர்கள்
எல்லாம் தாழ்ந்தவர்கள் என்றும் எந்தவித எண்ணமும் இல்லாமல் சமுதாயம் இருந்து. ஏனெனில்
அங்கு, அனைவருக்கும் வாய்வழி - செவிவழி தகவல் பரிமாற்றும் திறமை என்பது இருந்தது. அதனால்
எந்தவித பிரிவினைக்கும் ஏன் அப்படிபட்ட எண்ணமே வந்ததில்லை. ஆனால், இந்த நிலைமை முற்றிலுமாக
மாறத்தொடங்கியது. அதாவது, எழுதவும், படிக்கும் திறமை மூலம் தகவலை பரிமாறிக்கொள்ளும்
நிலை வந்தவுடன், பொதுவாக இருந்துவந்த கற்றல் என்பது தனி நபர் சார்ந்து போனது. எப்படியெனில்,
வாய்வழி - செவிவழி கற்றல் இருந்தபோது தகவல்கள் எல்லாருக்கும் தாராளமாக பரிமாறிக்கொள்ளபட்டது.
ஏனெனில், எல்லாருக்கும் கற்றல் என்பது வாய்வழி - செவிவழி என்ற தகவல் பரிமாற்றம் என்ற
கற்றலுடன் தொடர்பு உடையதாய் இருந்து. அதுவே, தகவல் தொடர்புக்கு புதியதாய் எழுத, படிக்க
வேண்டும் என்ற நிலை வந்தவுடன் அத்தகைய திறமையை வளர்த்துகொள்வதில் பலவிதமான தடைகள் இருந்து.
ஏனெனில், அப்படிபட்ட திறமையானது புதியதாக இருந்தால் அதை கற்றுகொள்வதில் விருப்பம் இல்லை.
அதுபோல மிக எளிதில் கற்று தேர்வது என்பது மிக கடினமாக இருந்தது. எனவே, எழுத்து, படிப்பு
மூலம் தகவல் பரிமாறும் திறமையை சமுகத்தின் ஒரு சிலரே கற்றுவந்தனர். அத்தகைய கற்றல்
சமுகத்தின் எல்லாருக்கும் கிடைக்கவில்லை. எனவே, நாளடைவில் எழுதி, படிக்கும் தகவல்கள்
தான் உண்மையானவை, நம்பகத்தன்மையானது என்ற கருத்து சமுதாயத்தால் நிலை நிறுத்தபட்டது.
அதோடு மட்டும் இல்லாமல் ஒருவரின் கற்றலின் திறமை அல்லது அறிவு என்பது பழங்காலத்தில்
பயன்படுத்திய வாய்வழி - செவிவழி தகவல் தொடர்பு கற்றலின் மூலம் இல்லாமல் புதியதாக தோன்றிய
எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும் என்ற அளவுகோலை வைத்து ஒருவரின் திறமையும், அறிவும்
வரையறை செய்யப்பட்டது. அப்படி வரையறுத்ததால் தான் கற்றல் என்ற ஒரு சாதாரன விசயம் அதாவது,
தன் தகவலை சமுகத்தில் பரிமாறிக்கொள்ள தனக்கு அதிகமான திறமை அதாவது எழுதவும், படிக்கவும்
தெரியும் என்ற விசயமானது மிக பெரியதாக ஓர் பிம்பமாக சமுதாயத்தில் உருவாக்கபட்டது. ஆனால்
இப்படிபட்ட எழுதும், படிக்கும் திறமை என்பது சமுகத்தில் உள்ள அனைவருக்கும் கிடைக்கும்
மாதிரி சமுகமானது கட்டமைக்கபட்டிருந்தால் பரவாயில்லை ஏனெனில், எல்லாருக்கும் எழுதவும்,
படிக்கவும் தெரியும் என்னும் போது எந்தவித பாகுபாடும் சமுதாயத்தில் வரப்போவதில்லை.
எனவே, சமுகத்தில் எந்தவித பிரிவினையும் உண்டாகாமல் சமத்துவத்துடன், சமதர்மம் உள்ள சகோதரத்துத்துடன்,
பாதுகாப்பான, சுதந்திரமான சமுதாயம் எப்பொழுதும் இருந்திருக்கும். ஆனால், அப்படிபட்ட
கற்றல் என்பது சமுகத்தில் உள்ள எல்லாருக்கும் கிடைக்கபெறவில்லை. நாளடைவில் அப்படிபட்ட
திறமைகளை கற்றவர்கள் எல்லாம் கல்வி பயின்றவர்கள் எனவும், அப்படிபட்ட திறமைகளை வளர்த்துகொள்ளாதவர்கள்
எல்லாம் கல்லாதவர்கள் என்றும் அவர்களின் திறமைகள் கற்றுகொண்ட முறைக்கு கல்வி என்று
பெயர் சூட்டபட்டது. இப்படித்தான் கல்வி என்ற மிகபெரிய ஊழல் உருவாக்கபட்டது. ஏனெனில்
சமதர்மம் உள்ள ஒரு சமுதாயத்தை கல்வி என்ற ஒரு திறமையானது பிரிக்க ஆரம்பித்தது. மேலோட்டமாக
பார்த்தால், அப்படிபட்ட கல்வி என்பது சமுதாயத்தில் தகவல் பரிமாற்றத்திற்கு தேவையான
மிக எளிமையான ஒரு வழித்தானே என்று தோன்றலாம் ஆனால், அப்படிதான் நிகழவில்லை. மாறாக,
சமுதாயத்தில் கற்றவர்கள் என்றும், கல்லாதவர்கள் என்றும் பிரிவினை உண்டாக கல்வி என்ற
தகவல் பரிமாறிக்கொள்ளும் திறமை உதவியது. மேலும், கற்றவர் எல்லாரும் சமுகத்தின் வளர்ச்சிகாகதானே
தங்கள் திறமையை வளர்த்து கொண்டார்கள் எனவே, அவர்கள் மற்ற இதுபோல திறமையை வளர்த்து கொள்ளாத
கல்லாதவர்களுக்கு, தான் கற்ற, பெற்ற தகவல்களை பரிமாறிக்கொண்டு ஒரு சமதர்மம் உள்ள சமுதாயத்தை
உருவாக்குவார்கள் என்றும் தோன்றலாம். ஆனால், எப்போது கல்வி என்ற கற்றல் தொடங்கியதோ
அது எப்போது சமுதாயத்தில் எல்லாருக்கும் சரியாக கற்று கொடுக்கபடவில்லையோ அப்போதெ அப்படிபட்ட
திறமைகளை வளர்த்துகொண்டுள்ளவர்களை மற்றவர்கள் சார்ந்து வாழ வேண்டும் என்ற கட்டாயம்
உருவாகிவிட்டது, மனிதனால் உருவாக்கபட்டது. அதுபோலதான், சமதர்மமாக வாழ்ந்த சமுதாயத்தில்
கல்வி என்பது கொஞ்சம் கொஞ்சமாக பரவி நாளடைவில், அது அந்த சமுகத்தில் மிக பெரிய கற்றவர்,
கல்லாதவர் என்ற பிரிவினையை உருவாக்கியது. எனவே, உண்மையில் கல்லாதவர் அதாவது எழுத, படிக்க
தெரியாதவர்கள் அதிக படிப்பினைகளை பெற்றிருந்தாலும், நிறைய விசயங்கள் தெரிந்து இருந்தாலும்
சமுதாயத்தால், அவர்கள் கருத்துக்கு முக்கியத்துவம், அவர்களுக்கு மரியாதையும் கிடைப்பதில்லை.
ஆனால், அதே திறமையை அதாவது கல்வி பயின்றவர்கள் என்றால், நிறைய விசயங்கள் தெரிந்து இருக்கவில்லை
என்றாலும், படிப்பினைகள் இல்லை என்றாலும் கல்வி என்ற எழுத, படிக்க தெரியும் என்பதால்
மட்டும் சமுகத்தில் மதிப்பும், மரியாதையும் கொடுக்கப்படுகிறது. அதனால், சமுதாயத்தில்
பிரிவு ஏற்பட்டது. அப்படிபட்ட பிரிவினையை உருவாக்கியதில் மிக முக்கியமான பங்கு கல்வி
என்ற எழுத, படிக்க தெரியும் என்ற தகவல் பரிமாற்ற முறைதான் காரணம். அதனால், கல்வி எனபதே
சமுதாயத்தில் பிரிவினையை உண்டாக்கும் மிகபெரிய ஊழலாகும். ஏனெனில் அப்படிபட்ட கல்வி
என்பது சமுகத்தில் இல்லாமல் இருந்தபோதும் கூட ஒற்றுமை நிலவியது. ஆனால், சமுதாயத்தின்
சமதர்மத்தை கட்டிகாப்பாற்ற வேண்டிய கல்வியானது உருவான பின்புதான் சமதர்மம் உள்ள சமுதாயமானது
சமத்துவத்தை இழந்து, சகோதரத்துவத்தை இழந்து, சுதந்திரத்தை இழந்து, பாதுகாப்பற்று வாழதொடங்கியது.
கல்வியும் சமுதாயமும்
கல்வி என்பது சமதர்மமுள்ள, சமத்துவம் உள்ள, சகோதரத்துவமுள்ள
சுதந்திரமான, பாதுகாப்பான சமுதாயத்தை மேன்மேலும் வளர்ச்சியடைய வைப்பதற்காகதான் இருந்திருக்க
வேண்டும் அதுதான் கல்வி உருவாக்கபட்டதன் நோக்கமும், அதுதான் கல்வியின் நியதி, ஆனால்,
அப்படி இல்லாமல் கல்வி என்பது சமுகத்தை பிரிக்ககூடிய ஓர் மோசடியாகவும், ஊழலாகவும் உருவாகிவிட்டது,
உருவாக்கபட்டது. அதன்மூலம் சமுதாயத்தினுள் கற்றவர், கல்லாதவர் என்ற பிரிவினை உண்டாக்கபட்டது.
அது மேலும், கற்றவர்தான் எல்லா விசயங்களையும் செய்யமுடியும் எனவும் அவர்கள்தான் எந்தவித
வேலைக்கும், செயலுக்கும் பொருத்தமானவர்கள் எனவும், அவர்களை எல்லாம் தனியாக பிரித்து
அவர்களுக்கு தகுந்தது போல வேலையை பார்க்க வேண்டும் என்ற எண்ணமும் அப்படியே, அப்படிபட்ட
வேலையே கற்றவர்களுக்கு கொடுக்கபட்டது. மேலும், கல்லாதவர்களுக்கு அவர்களுக்கு ஏற்றார்போல்
வேலைகள் எல்லாம் அதாவது, எந்த வேலைகள் எல்லாம் கடினமாக உள்ளதோ அந்த வேலைகள் எல்லாவற்றையும்
கல்லாதவர்களுக்கு பிரித்து கொடுக்கபட்டது. மேலும், சமுதாய கட்டமைப்பிற்கு எந்த வேலையை
யார் செய்தாலும் பரவாயில்லை என்ற எண்ணம் மறைந்து, நாளடைவில் கற்றலுக்கு ஏற்றதுபோல வேலையும்,
செயலும் கொடுக்கபட்டது. அப்படியே படித்தவர்களுக்கும், படிக்காதவர்களுக்கும் சமுகத்தில்
ஏற்றதாழ்வு உருவாக்கப்ட்டது. அதோடு மட்டும் இல்லாமல், கற்றவர்கள் எல்லாரும் மேன்மையானவர்கள்
எனவும், கல்லாதவர்கள் எல்லாம் கீழானவர்கள் என்றும் இருபிரிவினருக்குள்ளும் தாழ்வுமனபான்மையும்,
தலைகனமும் உருவாக்கப்பட்டுவிட்டது. மேலும், தாங்கள் சமுதாயத்தின் நலனுக்காக கற்ற கல்வி
என்ற தகவல் பரிமாற்ற முறையும் சமுகத்தின் எல்லாருக்கும் முறையாக கற்றுகொடுக்கபடவில்லை,
தெரிந்தே அப்படிபட்ட தகவல் பரிமாற்றம் தடைசெய்யபட்டது., அதனால் கல்வி என்ற ஊழல் மிக
வேகமாக வளர ஆரம்பித்தது, அதனால், அந்த ஊழல் செய்பவர்கள் எல்லாம், அத்தகைய ஊழல் செய்ய
தெரியாதவர்களை அதாவது, கல்வி என்ற தகவல் பரிமாற்றம் செய்ய தெரியாத கல்லாதவர்களை தங்கள்
கட்டுபாட்டிற்குள் கொஞ்சம் கொஞ்சமாக கொண்டுவந்தார்கள். இப்படித்தான் கல்வி என்ற ஊழலானது
சமதர்மம் உடைய சமுதாயத்தை மேலும் வலிமையாக்குவதற்கு பதிலாக, சமுகத்தில் இருந்த சமத்துவத்தை
உடைத்து, சகோதரத்துவத்தை அழித்து, சுதந்திரத்தை பறித்துகொண்டது.. இப்படிபட்ட கல்வி
என்னும் ஊழல் என்ற தகவல் தொடர்பின் மூலம் சமுதாயத்தை கட்டமைத்து, அதற்கு முன்பு மற்ற
உயிரினங்களிடமிருந்து தப்பி பிழைத்து வாழும் தேவையான திறமைகளை வளர்த்துகொண்டு, தப்பி
பிழைத்து வந்த சமுதாயமானது, இப்போது தன் இனத்திற்குள்ளேயே, தனக்கு தேவையானதை மட்டும்
ஆசைப்பட்டு ஏற்றுக்கொள்ளாமல், தான் ஆசைப்பட்டதை எல்லாம் தன் தேவையாக்கி கொண்டு அதற்காக,
தன் இனத்தை சார்ந்தவர்களையே அடக்கி ஆள்ந்து கொண்டிருக்கிறது இன்றைய மனித சமுதாயம்.
அப்படிபட்ட நிலை உருவாக மிக முக்கியமான காரணம், கல்வி என்ற ஊழல் தான். மேலும் இப்படிபட்ட
கல்வி என்ற ஊழல், கற்றவர், கல்லாதவர் என்ற பிரிவினையை உண்டாக்கியதோடு மட்டும் இல்லாமல்,
கற்றவர்களுக்குள்ளே மேலும், பிரிவினையை உருவாக்கியது. எப்படி எனில், கற்றல் என்பது
பொதுவான ஒன்று அதில், எல்லாவித விசயங்களும் அடங்கிவிடும். ஆனால், அப்படிபட்ட கற்றலை
முழுமையாக ஒரு மனிதனால் பெற முடியாத காரணத்தால், அதாவது எல்லா விசயங்களையும் தன்னால்
தெரிந்துகொள்ள முடியாது, என்ற தன் கையிலாகாததனத்தினால் கற்றலில் பல பிரிவுகளை உருவாக்கியது
அப்படி, உருவாக்கப்பட்ட பல பிரிவுகளை மேலும் பல பிரிவுகளாக விரிவாக்கம் செய்து, கற்றல்
என்ற பெயரில் விசயத்தை தன் வசதிக்கு ஏற்ப சிறிய சிறியதாக பிரித்து கொஞ்சம் கொஞ்சமாக
கற்றுகொண்டது. அதன் அடிபடையில்தான் கல்வி என்ற ஊழலானது, இத்தகைய கல்வி, இத்தகைய படிப்பு
அதாவது, தொடக்க கல்வி, மேல் படிப்பு, உயர் படிப்பு பின் அதனினும், பெரிய படிப்பு சிறிய
படிப்பு என பிரித்து வைத்துகொண்டது. மேலும், அதையெல்லாம் ஒட்டுமொத்தமாக கற்க தன்னால்
முடியாததால், தன்னால் முடியும் தன்னால் மிக எளிதாக கற்றுக்கொள்ளபடும் திறமைகளை அதாவது
கல்வியினை மட்டும் தேர்ந்தெடுத்து கற்றுகொண்டது. மேலும், கற்றுக்கொண்ட கல்வியின் தேவையின்
அடிப்படையில் கல்வி என்பது பிரிக்கபட்டு அந்த கல்வியிலேயே உயர்ந்த கல்வி, தாழ்ந்த கல்வி
எனவும் விரிவாக்கபட்டது. ஆனால், இதற்கெல்லாம் அடிப்படை என்பது வெறும் எழுதுவதும், படிப்பதும்
மட்டும்தான். அப்படிபட்ட எழுத்தும், படிப்பும் சமுகத்தின் உறுதியான கட்டமைப்பிற்குதான்
என்பதை மறந்து கல்வி என்ற ஊழலானது படிப்படியாக வளர்ச்சியடைந்து. அதாவது முதலில் கல்வி
என்பது, சமுதாயத்தில் கற்றவர், கல்லாதவர் என்ற பிரிவினையை உருவாக்கியது மட்டும் இல்லாமல்
இப்போது, அது கற்றவர்களுக்கு இடையிலும் உயர்ந்த படிப்பு, தாழ்ந்த படிப்பு என்ற பிரிவினையை
அதாவது, படிப்படியான சமமற்ற பிரிவினையை மனித சமுதாயமானது உருவாக்கிகொண்டது. அதனடிப்படையில்
கல்வி என்ற ஊழல் மேன்மேலும் விரிவடைந்து சமுதாயத்தின் எல்லா பகுதிக்கும் சென்றுவிட்டது
ஆனால், இதில் என்னவொரு விசித்திரம் என்றால் கல்வியில் நிறைய ஊழல்கள் இருக்கிறது எனவும்,
சமுகத்தில் நிறைய ஊழல்கள் இருக்கிறது எனவும் கூறிகொள்ளும் சமுதாயமானது அப்படிபட்ட கல்வி
என்பதே ஊழல் தான் என்பதை ஒருபோது எண்ணி பார்ப்பதில்லை.
கற்றலும் கற்பித்தலும்
கல்வி என்பதே மிகபெரிய ஊழலாகும். அப்படிபட்ட கல்வியை
கற்றுகொள்வதிலும், கற்றுகொடுப்பதிலும் மிகப்பெரிய மாயை ஒன்று நிழவுகிறது. அதாவது, கற்றல்
அல்லது கல்வி என்பது ஒருவன் பள்ளியில் அல்லது கல்லூரியில் படித்தால்தான் அது கல்வி
என சமுதாயத்தால் ஓர் மாயபிம்பம் உருவாக்கிவைக்கபட்டுள்ளது. எப்படியெனில், எந்தவொரு
உயிரினமும் கற்றுகொள்வதற்கு யாராவது கற்றுகொடுக்க வேண்டும் என்பது அவசியம்தான். ஆனால்,
அப்படிபட்ட அவசியமானது பள்ளியில் இருந்துதான் தொடங்குகிறது என்பது முட்டாள்தனம். அதாவது
நேரடியாக சொல்லவேண்டுமானால், ஆசிரியர்கள்தான் கல்வியை கற்றுகொடுக்கமுடியும் என்பதும்
அவர்கள் கற்றுகொடுப்பது மட்டும்தான் கல்வி என்பது என ஓர் மாய பிம்பம் சமுதாயத்தால்
உருவாக்கி வைக்கபட்டுள்ளது. அதாவது, ஆசிரியர்கள் என்பவர்கள், பள்ளியில், கல்லூரியில்
பாடம் கற்றுகொடுப்பவர்கள்தான், எனவும் அதனால் பள்ளியில் கற்றுகொடுப்பவர்கள் மட்டும்தான்
ஆசிரியர்கள் எனவும் இந்த மாய பிம்பம் சமுதாயத்தால் தெரிந்தோ, தெரியாமலோ உருவாக்கி வைக்கபட்டுள்ளது.
அதேபோல மற்றவர்களுக்கு கற்றுகொடுக்கும் ஆசிரியர் தான் சமுகத்தில் உயர்ந்தவர், அவரால்
தான் நல்ல சமுகத்தை உருவாக்க முடியும் என்ற எண்ணம் இருக்கிறது. அதாவது, ஆசிரியர் என்பது
கற்றுகொடுப்பவர்கள்தான், பாடம் சொல்லிகொடுப்பவர்கள்தான் அதில் எந்த வித மாற்றுகருத்தும்
இல்லை. ஆனால், அவர்கள் மட்டும்தான் ஆசிரியர்கள், அவரால் மட்டும்தான் கற்றுகொடுக்கமுடியும்
என்றும் அவர்களை தவிர வேறு யாராலும் கற்றுகொடுக்க முடியாது என உருவாக்கிவைக்கபட்டுள்ள
பிம்பத்தைதான் சகித்துகொள்ள முடியவில்லை. ஏனெனில், முதலில் ஆசிரியர் என்றால் என்ன என
பார்ப்போம். அதாவது, எந்தவொரு விசயத்தையும், எந்தவொரு நபர்க்கு எதுவெல்லாம், எவரெல்லாலும்
உணர்த்த முடியுமோ அல்லது உணர்த்துகிறதோ, எதுவெல்லாம் பார்த்து, கேட்டு தெரிந்துகொள்ளமுடியுமோ,
உணர்ந்துகொள்ள முடியுமோ எவைகள் எல்லாவற்றிலும் இருந்து ஒருவருக்கு படிப்பினைகளை தரமுடியுமோ,
பெறமுடியுமோ அதுவெல்லாம், அவரெல்லாம் ஆசிரியர்தான். அப்படியிருக்க, இவையெல்லாம் சமுதாயத்தில்
நிலை நிறுத்தப்படாமல், பள்ளியில், கல்லூரியில் கற்று கொடுப்பவர்கள் மட்டும்தான் ஆசிரியர்
என்ற மாயபிம்பம் உருவாக்கிவைக்கபட்டுள்ளது. இதுவும் கல்வி என்ற ஊழல் காரணமாகத்தான்
உருவாக்கி வைக்கபட்டுள்ளது. எப்படியெனில், கல்வி பயின்று இருக்கும் தான் உயர்ந்தவர்
என்ற எண்ணமும், மற்றவர் எல்லாம் தனக்கும் கீழ் என்ற எண்ணமும் இருப்பதால்தான், தன்னால்
மட்டும்தான், தான் மட்டும் தான் மற்றவர்களுக்கு தான் பயின்றதை சொல்லமுடியும் என்ற எண்ணம்
உருவாகிவிட்டது, உருவாக்கபட்டுள்ளது. அதனால், அவர் சொல்லாமலே அதாவது, மற்ற எதையும்,
அதாவது புத்தகத்தை பார்த்தோ, காதில் கேட்டோ, ஏதாவது நிகழ்வினை பார்த்தோ தெரிந்துகொள்வதும்
கல்விதான் அப்படியும் கூட கல்வியை பயிலலாம், ஆனால், அதை ஒருபோதும் சமுதாயமானதும், ஏன்
அரசாங்கமும் சரி அங்கீகரிப்பது இல்லை. இதுதான் கற்றலிலும் கற்பித்தலிலும் உள்ள நிலை.
இப்படித்தான் சமுதாயத்தில மாணவர், ஆசிரியர் என்ற மாயபிம்பம் மிக பெரியதொரு பொருப்பாகவும்,
தொண்டாகவும் சமுதாயத்தால் உருவாக்கி வைக்கபட்டுள்ளது. அதைபோல்தான், சமுதாயத்தில் மற்ற
அனைவரும் ஆசிரியர் என்றால் வியந்து உயர்வாகவும், தனி மதிப்பும், மரியாதையுமாக பார்க்கின்றனர்.
அப்படிபட்டவர்கள் ஆசிரியர்கள்தான் அவர்களை குறை கூறவில்லை, அதில் எந்த மாற்றுகருத்தும்
இல்லை. ஆனால், பல விசயங்கள் கற்று தரும் யாரையும், எதுவையும், ஏன் ஆசிரியர்களாக மதிப்பதில்லை,
அப்படி மரியாதை தரப்படுவதில்லை. ஏனெனில் அதுவும் ஓர் ஊழல்தான், மேலும், கல்வி என்ற
மாய பிம்பத்தின் ஊழலின் ஒரு பகுதிதான்.
இன்றைய சமுதாயத்தில் கல்வி என்ற ஊழலின் நிலை
சமதர்மம் உள்ள, சமத்துவமான, சகோதரத்துவம்
நிலவும், சுதந்திரமான, பாதுகாப்பான ஓர் சமுதாயத்தை உருவாக்க தேவைப்படும் தகவல் பரிமாற்றம்
என்ற கருவி, நாளடைவில் வளர்ச்சியடைந்து கல்வி என்ற ஊழல் உருவாகி இன்றைய சமுதாயத்தை
உருவாக்கியுள்ளது. ஆனால், உண்மையில் கல்வி என்பது ஊழலாக இல்லாமல் வெறும் தகவல்பரிமாற்ற
கருவியாக இருந்து சமுதாயத்தில் எல்லாருக்கும் தேவையான பாதுகாப்பாக வாழ எல்லாவற்றையும்
அல்லவா கற்றுகொடுத்து இருக்க வேண்டும். ஆனால், அப்படி இல்லாமல் கல்வி என்பதே சமதர்மம்
உள்ள சமுதாயத்தில் பிரிவினையை ஏற்படுத்தும் கருவியாக மாறிபோய்விட்டது. அதோடு மட்டும்
இல்லாமல் அப்படிபட்ட கல்வியானது இன்றளவும் வெறும் தகவல் தொடர்பு கருவியாக இல்லாமல்
சமுதாயத்தை மென்மேலும், பிரிவினையை உண்டாக்கியே வைத்துள்ளது. இன்றைய சமுதாயத்தில் கல்வியானது,
கற்றுகொடுக்கப்பட்டு, கற்றபின்பு அதனை பயன்படுத்தி, சமதர்மம் உள்ள வலிமையான சமுதாயத்தை
கட்டமைக்க சொல்லிகொடுப்பதற்கு பதிலாக, எல்லா விசயங்களும் கற்றுகொடுக்கபட்டு கற்றபின்பு,
அதனை சமுதாய வளர்ச்சிகாக பயன்படுத்தாமல் தான், தன்னை சார்ந்தவர்களையும், தன்னை மட்டுமே
வளர்ச்சியடைய வைத்துகொள்ளும் மாதிரி மட்டுமே கல்வி என்ற ஊழலானது போதிக்கப்படுகிறது
அப்படித்தான் போதிக்கிறது. மேலும், எல்லாவிதமான விசயங்களும் எல்லாருக்கும் தெரிந்து
இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, அதேபோல், எந்த விசயமானாலும், தான் தேர்ந்தெடுத்து
படிக்கும் அதாவது, தான் விருப்பபட்டு கற்றுக்கொள்ளும் கல்வியில் மட்டும்தான் நம்பிக்கை
வைக்கப்படுகிறது. மாறாக, அந்த கல்வியில் கற்றுதருவதை விட மேலாக எவருக்கேனும் விசயங்கள்
தெரிந்து இருந்தாலும் அதற்காக சரியான மதிப்பும், அங்கீகாரமும் சமுதாயத்தில் கிடைப்பதில்லை,
மேலும் அரசாங்கமே அப்படிபட்ட கருத்தை ஏற்றுகொள்வதில்லை, கல்வி கற்றவர்களும் சரி, கல்வி
கல்லாதவர்களும் சரி யாரும் அப்படிபட்ட கருத்தை ஏற்றுகொள்வதில்லை. மாறாக, எந்தவித தகவல்களானலும்
சரி, அது முறையாக பயின்றவர்கள் அதுவும் அங்கீகரிக்கபட்ட முறையில் பயின்றவர்கள் சொல்லும்
கருத்தில் எந்தவித உண்மைத்தன்மை இல்லை என்றாலும் கண்மூடித்தனமாக ஏற்றுகொள்ளபட்டு அங்கீகரிக்க
படுகிறது. மேலும், கற்றவர்களுக்கு இடையிலும் படிப்படியான வேறுபாடு நிலவுவதால், அந்த
துறையை சார்ந்தவர்கள் அல்லது அத்தகைய படிப்பை படித்தவர்கள் சொல்வது மட்டுமே உண்மை எனவும்,
மேலும், அதே விசயத்தை மற்றவர்கள் கூறினாலும் கல்வி பயினறவர்களுக்கிடையே நிறைய முரண்பாடுகள்
நிலவுகிறது. இப்படி சமுதாயத்தில் சமுதாயத்திற்கு தேவையான தகவலை யார் வேண்டுமானலும்
சொல்லலாம், என்ற நிலை மாறி இப்போது, படித்தவர்கள் சொல்வது மட்டும்தான் உண்மையானது என்ற
பிம்பம் உருவாக்கபட்டுவிட்டது அதேபோலவே, கல்வி கற்றவர்களும் சரி, அதை சமுதாயத்திற்காகதான்
கற்றோம் என்பதையே மறந்துவிட்டு, தான் மட்டும் தன்னை சார்ந்தவர்களை மட்டுமே முன்னேற்றி
கொள்ளவே பயன்படுத்துகின்றனர் இது தான் இன்றைய சமுதாயத்தில் கல்வி என்ற ஊழலின் நிலையாகும்.
ஊழலும் சமுதாயமும்
சுதந்திரமான, பாதுகாப்பான, சமத்துவம்
உள்ள, சகோதரத்துவம் உள்ள, சமதர்மம் நிலவும் சமுதாயத்தில் இருக்கும் மக்கள் அனைவரும்
ஒற்றுமையாக இருப்பதாக தான் நம்பிகொண்டிருக்கின்றனர். மேலும், நாட்டில் சாதி, மதம்,
இனம், மொழி, பாலினம் போன்ற பிரிவினைகள் இருக்கின்றன என்று எல்லாருக்கும் தெரியும்.
ஆனால், கல்வி என்ற பிரிவினை ஒன்று இருக்கிறது என்பது யாருக்கும் தெரிவதில்லை. மேலும்,
இத்தனை பிரிவினைகளும், எந்த சமுதாயமானது நாகரீக வளர்ச்சி இல்லாமல், அறிவிலித்தனமாக,
சிந்திக்க கூட தெரியாமல், கையிலாகாத சமுதாயமாக இருக்கிறதோ அந்த சமுதாயத்தில்தான் சாதி,
மதம், இனம், மொழி, பாலினம் போன்ற வேறுபாடுகள் எல்லாம் இருக்கும். இதனை எல்லாம் களைந்து
மிக சரியான, சமதர்மம் உள்ள சமுதாயத்தை முழுமையாக, சிறந்த, நல்ல சிந்தனைதிறன் உடைய சமுதாயமாக
மாற்றுவதுதான் கல்வி கற்றவனின் கடமை. ஆனால், இங்கே கற்றல் என்பது கல்வி, கற்றவர்கள்,
கல்லாதவர்கள் என்பதை குறிபிடவில்லை, மாறாக, அப்படி என இருக்கும் கல்வி என்ற ஊழலைத்தான்
குறிப்பிடுகிறேன் அப்படிபட்ட கற்றல்தான் இன்றைய சமுதாயத்தில் இல்லை. இதை எல்லாம் செய்ய
வேண்டிய கல்வி என்பதே இங்கே ஊழலாகத்தானே இருக்கிறது. ஏனெனில் ஒட்டுமொத்த சமுதாயத்தின்
வளர்ச்சியும், இப்படிபட்ட கற்றல் உள்ளவர்களின் கைகளில்தான் உள்ளது. அப்படிபட்ட கல்வி
கற்றவர்களை நம்பிதான் சமுகத்தின் மற்ற அதாவது கல்வி கற்காதவர்கள் எல்லாரும் இருக்கிறார்கள்.
அதனால்தான், கல்வி கற்காதவர்கள் எல்லாரும் தான் உழைத்ததோடு மட்டும் இல்லாமல், தன் பணத்தில்தான்
அதாவது, தனக்கு உணவு இல்லை என்றாலும் வரி கட்டி சமுதாயத்தின் மற்றவர்களை படிக்கவைக்கின்றனர்
அப்படி, படித்த எல்லாரும் கண்டிப்பாக தன்னை முன்னேற்றுவார்கள் என்ற நம்பிக்கையில்.
அதுதான் யாதர்த்தம் கூட. ஆனால், அப்படி படித்தவர்கள் எல்லாரும், இப்படி யார் என்றே
தெரியாத, விவரம் தெரியாத ஒருவரின் வரியில்தான் படிக்கிறார், அவர்களின் வாழ்க்கையையும்,
கூடவே தன் வாழ்க்கையையும் மற்றும் சமுதாயத்தையும் முன்னேற்ற பாதையில் வழி நடத்துவதற்க்காக.
ஆனால், இன்றைய சமுதாயத்தில் படித்தவர்கள் என்று இருக்கும் எல்லாரும் இதை செய்கிறார்களா
என்றால் இல்லை என்று ஆணித்தனமாக சொல்லலாம். ஏனெனில், அப்படி மற்றவர்களின் பணத்தில்
படித்தவர்கள்தான் இன்று, அவர்கள் வாழ்க்கைக்கு என்னென்ன தேவையோ அதை மட்டும் இல்லாமல்,
தேவைக்கும் அதிகமாகவே தன்னை மட்டும் உயர்த்திகொள்ள பார்க்கிறார்கள். மேலும், அப்படித்தான்
நடக்கிறது. இதில் சமுதாயத்திற்கு உழைப்பை கொடுத்து, சமுதாயத்தின் வளர்ச்சிக்கு பாடுபடுவதோடு
மட்டும் இல்லாமல், தன்னை உயர்த்திக்கொள்ள தனக்கு கிடைக்காத, கல்வி கற்கும் வாய்ப்பை
மற்றவர்களுக்கு, பணம் கொடுத்து உதவுகிறார். உண்மையில் அப்படி சமுதாயத்திற்கு பயன் தரும்
செயல்களை செய்யும், சமுதாயத்தால் படிக்காதவர்கள் என அழைக்கபடுவர்கள் எல்லாம் கற்றவர்களா
அல்லது அவர்களின் பணத்தில் படித்து, தன்னை மட்டும் முன்னேற்றி கொண்டு சமுதாயத்திற்கு
எந்தவித நன்மையும் செய்யாதவர்கள் கற்றவர்களா என்றால், உண்மையில் சமுதாயத்தால் படிக்காதவர்களாக
அடையாளபடுத்தி வைக்கபட்டிருக்கும் மக்கள் தான் கற்றவர்கள். நமது சமுதாயமும் சரி, அரசாங்கமும்,
நமது கல்வியமைப்பும் சரி எல்லாமே இப்படித்தான் சமுதாயத்தை வடிவமைத்து உள்ளது. எப்படியெனில்,
கல்வி என்ற பெயரில் சமுதாயத்திற்கு தேவையானதை எதையும் கொடுக்காமல் சமுகத்தை தாண்டி,
சமுகத்தின் வளர்ச்சிக்கு எதுவும் செய்யாமல் மற்ற எல்லாவற்றையும் முன்னேற்றிகொண்டிருக்கிறார்கள்.
உண்மையில், உலகம் மிக பிரமாண்டமாக வளர்ச்சியடைந்து நிற்கிறது. ஆனால், வெறும் பொருட்கள்
மட்டும்தான் அப்படி வளர்ச்சியடைந்து நிற்கிறது, ஆனால் மனிதன் என்பவன், தன்னை ஒரு மிருகத்துடன்
கூட ஒப்பிட முடியாத அளவிற்கு வளர்ச்சியின்றி தன்னை பின்னோக்கி கொண்டு சென்று கொண்டிருக்கிறான்.
இதில், கல்வி என்பது ஒரு மனிதனை சதையும், எழும்பும் உள்ள ஓர் உயிருள்ள இயந்திரமாகவே
உருவாக்குகிறது. அவனும் எந்த கேள்வியும் கேட்காமல் சமுதாயத்தின் சிலரின் நன்மைக்காகவே
தான் ஓர் உயிருள்ள இயந்திரமாக செயல்படுவதை அறிந்துகொள்ளாமல், அதை அவனே பெருமையாக சொல்லிகொண்டு
திரிகிறான். இன்றைய கல்வியானது மனிதனிடம் இருந்து மனித தன்மையை பிரிக்கிறது. படித்தவுடன்
இயந்திர குணத்தை தன்னுள் உருவாக்கிகொள்கிறான் அப்படித்தான் உருவாக்கபடுகிறான். மேலும்,
இப்படி இயந்திரமாய் உயிர்பிழைத்து இருப்பது எப்படி, என்று மட்டும்தான் இன்றைய கல்வி
சொல்லிகொடுக்கிறதே தவிர, தெரிந்தோ, தெரியாமல் கூட வாழ்க்கை என்றால் என்ன என்றோ, வாழ்வது
எப்படி என்றோ கற்றுகொடுப்பதில்லை. ஆனால், சமுதாயத்திற்கு இப்படி எந்தவித பயனும் இல்லாத
கல்வியாளன் என்ற ஒருவனுக்கு தான் ஏனோ சமுகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகமாக கிடைகிறது.
அவன் சதையுள்ள உயிருள்ள ஓர் இயந்திரமாக இருப்பதால் என்னவோ சக மனிதனிடம் இருந்து தன்னை
பிரித்து கொள்வதோடு மட்டும் இல்லாமல் தானும் மற்றவர்களையும் விலக்கி வைக்கிறான். இப்படித்தான்
இன்றைய கல்வி என்ற ஊழலானது மிக தெளிவாக வரையறை செய்யபட்டு நடைமுறைபடுத்தபடுகிறது.
ஊழல்வாதிகள்
தகவல் தொடர்பு என்ற திறமையானது,
அதாவது, வாய்வழி - செவிவழி தகவல் பரிமாற்ற திறமை வளர்ந்து, எழுதுதல், படித்தல் போன்ற
சாதாரண விசயமானது கல்வி என்ற மிகபெரிய பிம்பமாக மாறி இருக்கிறது. அப்படி இல்லாமல் யார்
எல்லாம் சமுதாயத்தின் நலனிற்காக போராடுகிறார்களோ அவர்கள்தான் உண்மையில் கற்றவர்கள்
மற்றவர்கள் எல்லாம் என்னதான் கல்வி பயின்றிருந்தார்கள் என்றாலும் கல்லாதவர்கள்தான்,
ஊழல்வாதிகள்தான். எப்படியெனில், முன்பின் தெரியாத சமுதாயத்தில் யாரோ போட்ட பிச்சையில்
படித்து தன் தகவல்தொடர்பு திறமை அதாவது கல்வி பயின்றவர், அதை சமுதாயத்திற்கு பயன்படுத்தாமல்,
அதாவது, தான் நல்லா படித்து, நல்ல மதிபெண்கள் பெற்று, நல்ல படிப்பு படித்து, நல்ல வேலைக்கு
சென்று தன் வறுமையை நீக்கி, தன் ஆசைகளை நிறைவேற்றி, தன் குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றி,
தன்னை சார்ந்த வேண்டபட்டவர்களின் தேவைகளை நிறைவேற்றி இப்படி கடினப்பட்டு, மேலும் எந்தவித
தவறும் செய்யாமல், அதாவது, இன்றைய சமுதாயத்தில் நிகழும் பல ஊழல்கள் போல் எதையும் செய்யாமல்,
தான் உண்டு, தன் வேலையுண்டு, தன் குடும்பமுண்டு என்று இருக்கும் மிக நல்லவர்கள் எல்லாரும்
எப்படி ஊழல்வாதிகளாக முடியும் என்ற கேள்வி எழலாம். ஆனால், சமுதாயத்திற்காக படித்தபடிப்பை,
தன் குடும்பத்திற்காக மட்டும் பயன்படுத்துவது அதாவது சமுதாயத்தில் எங்கோ ஓர் இடத்தில்
உயிர்வாழ தேவையான அடிப்படை தேவைகள் கூட இல்லாமல் பலர் இருக்கும்போது, தான் தன் குடும்பம்
என இருப்பது ஊழல்தான். மேலும், தன் குடும்பத்தை முன்னேற்றிகொள்வதில் எந்த தவறும் இல்லை,
ஆனால் தன்னை படிக்கவைத்த தனக்கு பிச்சைபோட்ட சமுதாயத்தை முன்னேற்றுவதும் அல்லவா அவர்களுடைய
கடமை. அதாவது, இவர்களின் பார்வையில், சமுதாயத்தில் நிறைய ஊழல்கள் நிகழ்கின்றது, நிறைய
பிரிவினைகள் இருக்கிறது என்று அதையெல்லாம், ஊழலாக கருதும் எவரும், தான் அதையெல்லாம்
சரிசெய்யத்தான் படித்திருக்கிறேன், அது எல்லாம் தன் வேலைத்தான், ஊழலை களைந்து ஓர் நல்ல
சமுதாயத்தை உருவாக்குவது என் கடமை என தப்பித்தவறி கூட நினைப்பதில்லை. தவறு, ஊழல் என
தெரிந்து அதை திருத்த முடியவில்லை, முயலவில்லை என்றால், ஓன்று அப்படி இயலாதவர் ஊழலை
அனுமதிப்பதாகத்தான் அர்த்தம், அப்படி அனுமதிப்பதன் மூலம் அந்த ஊழலில் தனக்கும் பங்கு
இருப்பதாகத்தான் அர்த்தம். மேலும், அப்படி இல்லையென்றால் ஓன்று அதை எல்லாம் செய்யும்
அளவிற்கு திறமை இல்லாதவர்களாக, கையிலாகாதவர்களாக இருக்க வேண்டும். எனவே, அவனும் எவ்வளவுதான்
கற்றவானாக இருந்தாலும் கல்லாதவனாகிறான் அவனும் ஊழல்வாதியாகிறான். மேலும், எப்போது ஒருவன்
தான் கற்றதை தவறாக பயன்படுத்துகிறானோ அல்லது சமுதாயத்திற்கு பயன்படுத்தாமல் இருக்கிறானோ
அவன் அப்போதே அறிவு விபச்சாரியாக மாறிவிடுகிறான், அவன் செய்துகொண்டிருக்கும் செயலுக்கு
பெயர் அறிவு விபச்சாரம் ஆகும். பின்பு எப்படி இவர்கள் எல்லாரும் மற்ற ஊழலை பற்றி பேசுகிறார்கள்.
இதை எல்லாம் மாற்ற வேண்டிய இவர்கள் எதையும் செய்யவில்லை என்றாலோ இப்படிபட்ட கல்வியாளனும்
ஓர் அறிவு விபச்சாரிதான், ஊழல்வாதிதான். அவன் செய்வதும் பெரிய ஊழல்தானே. என்ன மற்ற
ஊழல்கள் எல்லாம் நேரடியாக எளிதில் தெரிவதால் ஊழல் என தெரிகிறது. ஆனால், அப்படிபட்ட
ஊழல்களுக்கு எல்லாம் அடிப்படை காரணமே இப்படிபட்ட கல்வி என்ற ஊழல்தான் என்பது யாருக்கும்
தெரிவதில்லை. ஏனெனில், தன்னை சந்தோஷப்படுத்தும் அதாவது, தனக்கு தேவையான தவறுகள் எல்லாம்
தவறுகளாகவே பார்க்கபடுவதில்லை. இப்படி எந்தவொரு கல்வியாளனும், தன்னுடைய நலத்திற்காக
மற்றவரின் வாழ்க்கையை, நலனை நேரடியாகவோ, மறைமுகமாகவோ கூட பணயம் வைக்கமாட்டான். அப்படி
வைத்தான் எனில் அவன் கல்வியாளன் அல்ல. அவனும் ஊழல்வாதிதான், அவனும் அறிவு விபச்சாரித்தான்.
அப்படிபட்ட எல்லாரும் ஊழல்வாதிகள்தான் அவர்கள் செய்து கொண்டிருப்பதுதான் மற்ற எந்த
ஊழல்களை காட்டிலும் மிக பெரிய ஊழல் ஆகும். அதற்கு காரணமான கல்வி என்பதுதான் இன்றை சமுதாயத்தில்
மிகபெரிய ஊழலாகும். இன்றைய சமுதாயத்தில் பெரும்பாலோனோர் அறிவு விபச்சாரியாக, ஊழல்வாதிகளாகத்தான்
வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
கல்வியாளன்
எவன் ஒருவன் தன் கற்ற, பெற்ற படிப்பினைகள்
எல்லாத்தையும் தன் சமுதாயத்தின் சக மனிதனின் நலனுக்காகவும், சமதர்மமுள்ள, சமத்துவம்
உடைய, சுதந்திரமான, பாதுகாப்புள்ள சமுதாய கட்டமைப்பிற்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ வரும்
எந்தவொரு ஆபத்தையும் எதிர்கொண்டு, தன்னால் முடிந்தவரை முழுமுயற்சியையும் கொடுத்து தன்
சமுகத்தை சமதர்மமுள்ள, சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரமுடைய, பாதுகாப்பான சமுதாயத்தை
கட்டமைக்கின்றானோ, அவனே உண்மையான கல்வியாளன்.