Tuesday, December 7, 2010

கீற்றுகள்:

எந்தவொரு
செயலின்
வெற்றியும், தோல்வியும்
ஏதாவது ஒரு
நொடியில்தான்
தீர்மானிக்க படுகிறது.

வரம்வேண்டும்:

உன்னை
நினைத்து கொண்டிருப்பதற்க்காகவே
நான் நூறு
ஆண்டுகளாவது
வாழ வேண்டும் என்று
நினைக்கிறேன்.

முதன்மை:

கவிதை
தோன்றிய பிறகு
காதல் தோன்றியதா,
இல்லை - காதல்
தோன்றிய பிறகு
கவிதை தோன்றியாதா?

அறிவாளிகள்:

யாருக்கும்,
தெரியாத
சுலபமான
குறுக்குவழியை
பின்பற்றுபவர்கள் தான்
அறிவாளிகள்.

மரம் வளர்ப்போம்:

காலண்டரில்
தினசரி
கிழிக்கபடுவது
முடிந்து போன
நாட்கள் மட்டுமல்ல,
நம் நாட்டு
மரங்களும் தான்.

தேடல்:

எல்லாரும்
தேடிகொண்டிருக்கும்
சந்தோஷம்
எப்போது ஒரு
மனிதனுக்கு
கிடைகிறதோ?

மெழுகுவர்த்தி:

உலகின்
விடியலுக்காக
யாராவது ஒருவர்
எரிய நினைத்தால்
எரியும்வரை
குளிர்காய்ந்துவிட்டு
எழுந்து போய்விடும்
இன்றைய உலகம்.

தவறவிடுதல்:

எந்தவொரு
பொருளின் மீது
காதல்
கொண்டாலும் - அது
கிடைக்கவில்லை
என்றாலும் கூட
நேசித்தவர்கள்
தாங்கிகொள்வார்கள்.
காதலிக்கும் பெண்ணை
தவிர.

கனவு:

உன்னை பார்க்கும் போதெல்லாம்
உன் கைவிரல்
பிடித்து உன்னோடு
நடந்து செல்ல வேண்டும்
என்று தோன்றுகிறது.

விடியல்:

பல புரட்சிகரமான
கூற்றுகள் அனைத்தும்
இன்று
கூட்டங்களிலும்,
மேடை பேச்சிகளிலும்,
கைதட்டல்களிலுமே
முற்று பெற்று விடுகிறது.

விபத்து:

காலங்களில்
சில வினாடிகள்
மட்டும்
வஞ்சனை செய்துவிடுகிறது.
எதிர்பாராமல்
இருக்கும்போது
மனித வாழ்க்கையின்
அஸ்திவாரத்தையே,
அவர்களின்
சாதாரண பாதையிலிருந்து
அசாதரணமாக,
மாற்றிவிடுகிறது.

தலையெழுத்து:

எனக்கோ,
யாருக்கோ
ஏதாவது நிகழ
வேண்டும் என்று
தீர்மானித்திருந்தால்,
அந்த நிகழ்வு
எனக்காக
யாராளோ,
யாருக்காகவோ
என்னாலோ
வெற்றிகரமாக
முடித்து வைக்க படுகிறது.
விதியால்.

பசி:

எந்த்வொரு
அணுஆயுதமும்,
எந்தவொரு
ஏழையின்
பசியையும்,
பட்டினியையும்
தீத்துவைக்க முடிவதில்லை.

கனவு வாழ்க்கை:

யாரும் பின்
தொடராத,
அமைதியான
அழகான வாழ்க்கை
கனவு.

கீற்றுகள்:

ஒரு நொடியின்
சிறு கீற்றுகள்தான்
எல்லா செயல்களின்
முடிவுகளையும்
தீர்மானிக்கின்றன.

ஒரு மனிதனின் கனவு:

ஒரு மனிதனின் கனவு
இன்னமும் கூட
ஒரு வேலை
உணவாகத்தான் இருக்கிறது.

அடிமைகள்:

பணம் நமக்கு
அடிமையாக
இருக்க வேண்டும்.
நாம்
பணத்திற்க்கு
அடிமையாக
இருக்க கூடாது.

முற்றுபுள்ளி:

முடிவில்லா
பிரச்சனைக்கும்
நிரந்தர முற்றுபுள்ளி
வைக்கும்
சிறு சிறு
புன்னகைகள்.

என் அவள்:

உலகில்
முதலில்
தோன்றிய
வானவில் - என்னவள்.

ஆயுதம்:

உலகை
ஒழுக்குபடுத்த ஒர்
ஆயுதம் தேவை.
அதை எடுப்பது
இறைவானாக கூட
இல்லாமல்
இருக்கலாம்.

No comments: