செயலின்
வெற்றியும், தோல்வியும்
ஏதாவது ஒரு
நொடியில்தான்
தீர்மானிக்க படுகிறது.
வரம்வேண்டும்:
உன்னை
நினைத்து கொண்டிருப்பதற்க்காகவே
நான் நூறு
ஆண்டுகளாவது
வாழ வேண்டும் என்று
நினைக்கிறேன்.
முதன்மை:
கவிதை
தோன்றிய பிறகு
காதல் தோன்றியதா,
இல்லை - காதல்
தோன்றிய பிறகு
கவிதை தோன்றியாதா?
அறிவாளிகள்:
யாருக்கும்,
தெரியாத
சுலபமான
குறுக்குவழியை
பின்பற்றுபவர்கள் தான்
அறிவாளிகள்.
மரம் வளர்ப்போம்:
காலண்டரில்
தினசரி
கிழிக்கபடுவது
முடிந்து போன
நாட்கள் மட்டுமல்ல,
நம் நாட்டு
மரங்களும் தான்.
தேடல்:
எல்லாரும்
தேடிகொண்டிருக்கும்
சந்தோஷம்
எப்போது ஒரு
மனிதனுக்கு
கிடைகிறதோ?
மெழுகுவர்த்தி:
உலகின்
விடியலுக்காக
யாராவது ஒருவர்
எரிய நினைத்தால்
எரியும்வரை
குளிர்காய்ந்துவிட்டு
எழுந்து போய்விடும்
இன்றைய உலகம்.
தவறவிடுதல்:
எந்தவொரு
பொருளின் மீது
காதல்
கொண்டாலும் - அது
கிடைக்கவில்லை
என்றாலும் கூட
நேசித்தவர்கள்
தாங்கிகொள்வார்கள்.
காதலிக்கும் பெண்ணை
தவிர.
கனவு:
உன்னை பார்க்கும் போதெல்லாம்
உன் கைவிரல்
பிடித்து உன்னோடு
நடந்து செல்ல வேண்டும்
என்று தோன்றுகிறது.
விடியல்:
பல புரட்சிகரமான
கூற்றுகள் அனைத்தும்
இன்று
கூட்டங்களிலும்,
மேடை பேச்சிகளிலும்,
கைதட்டல்களிலுமே
முற்று பெற்று விடுகிறது.
விபத்து:
காலங்களில்
சில வினாடிகள்
மட்டும்
வஞ்சனை செய்துவிடுகிறது.
எதிர்பாராமல்
இருக்கும்போது
மனித வாழ்க்கையின்
அஸ்திவாரத்தையே,
அவர்களின்
சாதாரண பாதையிலிருந்து
அசாதரணமாக,
மாற்றிவிடுகிறது.
தலையெழுத்து:
எனக்கோ,
யாருக்கோ
ஏதாவது நிகழ
வேண்டும் என்று
தீர்மானித்திருந்தால்,
அந்த நிகழ்வு
எனக்காக
யாராளோ,
யாருக்காகவோ
என்னாலோ
வெற்றிகரமாக
முடித்து வைக்க படுகிறது.
விதியால்.
பசி:
எந்த்வொரு
அணுஆயுதமும்,
எந்தவொரு
ஏழையின்
பசியையும்,
பட்டினியையும்
தீத்துவைக்க முடிவதில்லை.
கனவு வாழ்க்கை:
யாரும் பின்
தொடராத,
அமைதியான
அழகான வாழ்க்கை
கனவு.
கீற்றுகள்:
ஒரு நொடியின்
சிறு கீற்றுகள்தான்
எல்லா செயல்களின்
முடிவுகளையும்
தீர்மானிக்கின்றன.
ஒரு மனிதனின் கனவு:
ஒரு மனிதனின் கனவு
இன்னமும் கூட
ஒரு வேலை
உணவாகத்தான் இருக்கிறது.
அடிமைகள்:
பணம் நமக்கு
அடிமையாக
இருக்க வேண்டும்.
நாம்
பணத்திற்க்கு
அடிமையாக
இருக்க கூடாது.
முற்றுபுள்ளி:
முடிவில்லா
பிரச்சனைக்கும்
நிரந்தர முற்றுபுள்ளி
வைக்கும்
சிறு சிறு
புன்னகைகள்.
என் அவள்:
உலகில்
முதலில்
தோன்றிய
வானவில் - என்னவள்.
ஆயுதம்:
உலகை
ஒழுக்குபடுத்த ஒர்
ஆயுதம் தேவை.
அதை எடுப்பது
இறைவானாக கூட
இல்லாமல்
இருக்கலாம்.
No comments:
Post a Comment