கண்களில்
காண்பவர்களையெல்லாம்
காதல் செய்வேன்
எனக்கென ஒருவள்
கிடைக்கும்வரை
உள்ளம்:
கண்படும்படி கட்டியுள்ள
தாஜ்மஹால் அதிசயமல்ல
பெண்ணே - என்
உள்ளத்தில் கண்படாமல்
இருக்கும் உன்னால்.
பாசம்:
வயலில்,
வளர்த்தவனின் பாசத்திற்க்கு
தலைவணங்கியது.
நெல்மணிகள் - அடுத்த நாள்
அறுவடை என
தெரியாமலே...
மலை:
இயற்கை
தன்னை
பாராட்டி தானே - மகுடம்
சூட்டிகொண்டதுதான்
மலை.
பருவமழை:
மழைகாலத்தில் பெய்த
கண்ணீரும்,
வெயில்காலத்தில் பெய்த
மழைன நீரும் - இணைந்து
உப்புன நீரானது
கடலில்.
பயணம்:
மழைகால
வெயிலோடு,
அவளின்
நினைவோடு,
ஒவ்வொரு அடியாய்
கால்தடம் பதிக்கவேண்டும்.
தொலைதூர பயணமாய்
மரணத்தை தேடி...
சோம்பேறி:
உழைத்து உழைத்து
தேய்ந்துபோன
காலணியை
ஒதுக்கிவைத்தான்
வீட்டைவிட்டு
சோம்பேறி.
விருந்து:
என்
அறிவுபசியால்
சுற்றி திரிகையில்
கிடைத்தது விருந்து
புத்தகத்திலிருந்து.
மிதிவண்டி:
அவள்
பாதம் பட்டவுடன்
மிதிவண்டிகூட
மிதிக்காமல் போனது
பள்ளத்தில்
என்னைபோல்.
இ(து)ன்பம்:
வாழ்க்கையில்
இன்பம் என்பது
துன்பம் நம்
கையைவிட்டுபோகும்போது...
துன்பம் என்பது
இன்பத்தை
நாம்
கைவிடும்போது...
மனைவி:
கருவறையிலிருந்த
எனக்கு முன்னுரை
கொடுத்த என்
அன்னையைபோல்
மணவறையில் என்
வாழ்க்கைக்கு அணிந்துரை
கொடுத்தாள்
என் காதலி.
மகள்(ன்):
அன்னையும்,
பிதாவும்
முன்னின்று
எழுதிய
புத்தகம் - மகன்(ள்)
வளர்ச்சி:
எட்டுவயதில்
தாடிவளர்க்க
ஆசைபட்டேன் - ஆனால்
இன்று பதினெட்டு வயது
தாடியே,
என் வாழ்க்கையானது
அவளால்.
மாலை நேரபொழுதில்:
என்னவளை
பார்த்ததால் என்னவோ
மலையின் பின்புறம்,
மறைய
முயன்றுகொண்டிருந்தது - சூரியன்
வெட்க்கத்தினால் போலும்.
என்னவள்:
மழைத்துளியை
வெயில்
முத்தமிடுவதால்
வானவில் தோன்றும்.
என்ற நியதி
பொய்த்துபோனது
ஓரிரு
நிமிடத்தில்
சாலையைக்கடந்து சென்ற
என் மின்னலால்.
வெட்கம்:
என்னவளை
நான் பார்த்த
அடுத்த வினாடி
உயிரில்லாத
பொருட்களனைத்தும்,
உயிருள்ள எனக்கு
வாழ்த்துக்கள் சொல்லயில்
நானே என்
நிழலில்
ஒளிய முயற்சிசெய்தேன்
வெட்கத்தில்.
அனுபவம்:
இன்று
சரியானவயாக இருந்தவைகள்
அனைத்தும் - நாளை
தவறானவையாக இருக்கலாம்
காரணம்,
நேற்றைவிட - நீ
இன்று ஒரு நாள்
வயதான அனுபவசாலி.
விதி:
தேடல்களின்
முற்றுபுள்ளி - மரணம்
தொடக்கம்
பிறப்பு.
கிறுக்கல்:
கவிதை
எப்படி எழுதவேண்டும் என்று
எனக்கு தெரியாது.
அதனால்தான் - நான்
கிறுக்கும் வார்த்தைகள்
கவிதையாய் இருக்கிறது
என் காதலால்.
சுவடுகள்:
என்
காதலை - உன்னிடம்
சொல்லவில்லை
என்
காதல் - உனக்கும்
தெரியாது.
இந்த
உலகத்திற்கும் தெரியாது.
என்
காதல் - எனக்கு
தெரியும்
நான் இருந்தாலும்,
இறந்தாலும்.
என்
காதல் - சுவடுகள்
என்றும் அழியாது.
No comments:
Post a Comment