காதல்
எனக்கு பிடிக்காமலே
போய் இருந்திருக்கும்
என் காதலியே
உன்னை காணாமல்
இருந்திருந்தால்...
காதல்:
காலத்தின் ஒரு வினாடி
விபத்திற்க்குள்ளானது
எனக்கே தெரியாமல் - நீ
என்னில் வந்த
தருணத்தை மட்டும் - என்
இதயம் படம்பிடித்து
பத்திரபடுத்தியபோது...
சுய நலவாதிதான்:
நானும்
சுய நலவாதிதான் - என்
உலகம்
என் மக்கள்
எல்லாரும்
நல்லாயிருக்க வேண்டுமென்று
நினைப்பதால்...
சமாதனம்:
உன்னை
பார்க்கும் போதெல்லாம்
என் கண்கள்
சண்டை போடுவதை
நிறுத்தி கொள்கிறது.
இமைக்காமல்.
விதி:
ஆயிரம் முறை
வென்றவனுக்கும்,
பிறப்பு ஒருமுறைதான்.
பலமுறை
தோற்றவனுக்கும்
இறப்பு ஒருமுறைதான்.
முதல் அதிசயம்:
இயற்கை படைத்த
இவ்வுலகின் எந்த
அதிசயங்களை பார்த்தாலும்,
கவிஞர்களுக்கு
கவிதை எழுத தோன்றாது.
உன்னை ஒருமுறை
பார்க்க நேர்ந்தால்.
காரணம்:
கடற்கரையில்
காகிதத்துடன்
காத்திருந்தேன்.
நீ வரும்வரை
எனக்கு காரணம்
எதுவும் கிடைக்கவில்லை
கவிதை எழுத.
விடியல்:
இருள்
இருந்தால்தான்
வெளிச்சத்தை
அடையாளம்
காணமுடியும்.
தன்னம்பிக்கை:
மனிதனின்
நிழல் ஒன்றுதான் - இல்லை
சூரியன்
ஒன்றுதான் இருக்கிறது.
சோர்வு:
காலுடைந்து போய்
நிற்க்கும் கடிகாரம் கூட
தினமும்
இரண்டுமுறை
சரியாக
காலத்தை காட்டும்
மனம்(முள்)
உடையாமல்
நின்றிருந்தால்.
மறக்கமுடியாமல்:
உன்னை
மறக்க வேண்டும்
மறக்க வேண்டும்
என்று எண்ணி
தினமும்
ஆயிரம்
முறைக்கு மேல்
நினைத்து கொண்டிருக்கிறேன்
உன்னை
மறக்க முடியாமல்.
புதிய சட்டம்:
துன்பத்தில்
இருக்கும்போது
கண்ணீர்
சிந்த வேண்டும்
என்பது, சட்டம்
ஒன்றும் கிடையாது.
புன்னகையுடனும்
வாழலாம்.
நீ இல்லாததால்:
என் வாழ்க்கை
பகலாய்
இருந்தால் கூட
திசையை கண்டுபிடித்து
விடுவேன்.
சூரியன் உதிப்பதால்.
நீ
இல்லாததால்
என் வாழ்வே
திசைகள்
மறைந்த இரவாய்
போய்விட்டது.
விடை:
வாழ்க்கை
யாரோ எழுதிய
புத்தகமா என்ன?
சில பக்கங்களை
புரட்டிவிட்டு
கடைசி பக்கத்தில்
முடிவை
தெரிந்து கொள்வதற்க்கு.
நம் காதல்:
என்னை
பிடிக்காத
உனக்குள்ளும்,
உன்னை
பிடிக்காத
எனக்குள்ளும்
நமக்கு பிடித்த
பந்தம்
"காதல்"
வஞ்சபுகழ்சி:
நீ
என்னை
வெறுக்கிறாய்..
உன்னை
நான் வெறுத்து விடுவேன்
என்று.
ஆனால்,
உன்னை எனக்கு
பிடிப்பதே
நீ என்னை
வெறுப்பதால்தான்
மறைமுகம்:
நீ
என்னை
வெறுக்கிறாய்
காரணம் - உனக்கே
தெரியாமல் நீ
என்னை
விரும்புகிறாய்.
புதிய பார்வை:
என் வீட்டு
ரோஜா செடியில்
பூக்கள்
தெரிவதே இல்லை - எனக்கு
எல்லா
பூக்களிலும்
நீ மட்டும்
தெரிவதால்.
அடையாளம்:
ஒவ்வொரு
தோல்வியும்,
எவனோ ஒருவனுக்கு
வெற்றியை
பரிசலித்து விடுகிறது.
No comments:
Post a Comment