எழுத்தாளர் தங்கரசன்
Freelance Journalist
Thursday, December 16, 2010
சராசரி மனிதன்
தெருவோரம்
நடந்துபோகையில்
தண்ணீர் குழாயில்
தண்ணீர்
சொட்டுசொட்டாக...
எல்லாரும்
பார்த்துகொண்டே சென்றார்கள்
யார் வந்து
குழாயை
அடைப்பார்கள்
என்று.
கடைசியில்
நானும்
பார்த்துகொண்டே
சென்றேன் - யார்
வந்து குழாயை
அடைப்பார்கள்
என்று.
எவனோ ஒருவனின் உண்மை காதல்...
நான்
தெரியாமல் கூட
உன்னை தவற
விடகூடாது,
என நினைத்தேன்.
ஆனால்,
இன்று
தெரிந்தே உன்னை
தவறவிடுகிறேன்
நீ
என்னை
பிடிக்கவில்லை
என்ற - உன்
விருப்பத்தை
நிறைவேற்றுவதற்க்காக....
நான்
உன் உடலை
எதிர்பார்க்கவில்லை.
உன்
உடைமைகளை
எதிர்பார்க்கவில்லை.
எந்த
உறவுகளையும்
எதிர்பார்க்கவில்லை.
அதையும் தாண்டி
என்றும்
என்னோடு
சேர்ந்துவாழும்
உன்
நினைவுகளை தான்
நான்
விரும்புகிறேன்.
என்னை வேண்டாம்
என்று விட்டுசென்ற
நீ ஏனடி,
உன்
நினைவுகளை மட்டும்
என்னிடமே
விட்டு சென்றாய்.
நான்
பார்த்தால் - நீ
முறைக்கும்,
நான்
சிரித்தால் - நீ
வெறுக்கும்,
நான்
பேசினால் - நீ
சண்டையிடும்
உன்
நினைவுகளைதான் - நான்
இன்னமும்
விரும்புகிறேன்.
நீ
என்னருகில்
என்னோடு தான்
இருக்கிறாய்
எப்போதும்
என்றும் - நீ
என்னைவிட்டு
விலகுவதில்லை
நீ
என்னை
பிரிந்து
சென்றபோதுதான்
நான் உணர்ந்தேன்.
நான்
உன்னை
விரும்புகிறேன்
என்று.
காதலன்
நான்
என் காதலி
உன்னிடம்
தோற்றுவிட்டேன்,
ஆனால்,
என் காதலி
நீ
என் காதலிடம்
தோற்றுவிட்டாய்...
-
உண்மையான
காதலுக்கும்,
காதலர்களுக்கும்
சமர்பணம்.
அதிசயம்:
உலகத்தின்
முதல் அதிசயம்
அன்பு.
சாதனை:
நீ
சாதனை
புரிவதற்க்காக
உனக்கென்று
தனியாக
சிவப்பு கம்பளம்
விரித்து
வரவேற்க்காது
இந்த
சமுதாயம்.
தன்னம்பிக்கை:
அமாவாசை
இரவு அன்றும்
நிலா தெரியும்
ஆனால்,
கறுப்பாக தெரியும்.
இருப்பதைகொண்டு:
உன்னிடம்
என்ன இருக்கிறதோ
அதை கொண்டு
உன்னிடம்
இல்லாததை
பெறு.
தேவதை:
உன் அனுமதி
கிடைக்காமல்,
சொர்க்கத்திற்க்கு
சென்ற,
காற்றுக்கள்
எல்லாம், தன்
துர்பாக்கியத்தை நினைத்து
தன்னைதானே,
எரித்துகொண்டு
உன் பொற்பாதங்களை
சரணடைய வருவதுதான்
மழைத்துளிகள்.
வேறுபாடு:
உன் பாதங்கள்
படாததால்தான்
பெண்ணே,
மண்ணில்
இத்தனை
வேற்றுமைகள்.
உண்மைகாதல்:
காதல்,
காமம்
இல்லாதது.
உன்னைத்தான்:
உன்னை
மறந்துவிட்டு
யாரையோ
தேடிகொண்டிருக்கிறேன்.
ஆனால்,
நான்
தேடிகொண்டிருப்பது
வேறு யாரையும் இல்லை
உன்னைத்தான்.
எனக்கே தெரியாமல்
நான் தேடிகொண்டிருப்பது
உன்னை மட்டும்தான்.
புதிய சட்டம்:
சட்டம்
தொடங்கும்
இடமும்,
முடியும் இடமும்
ஒன்று போலவே
இருக்க வேண்டும்.
சோதனை:
உண்மையை
பிரதிபலிக்க
இரு கண்களும்,
ஒரு உதடுமே போதும்.
அட....ச்சி:
கிடைச்சிருச்சி...
கிடைச்சிருச்சி...
சுதந்திரம்.
இந்தியாவுக்கு
சுதந்திரம்
கிடைச்சிருச்சி....
அட.....ச்சி
கனவு.
மவுன தீ:
உன் மவுனமே
என்னை
எரித்துவிடும்
போலிருக்கிறது
தீ ஏதும்
இல்லாமல்.
வித்தியாசம்:
எல்லா
நாட்களும்
சூரியன்
ஒரே மாதிரிதான்
உதயமாகிறது.
ஆனால்,
எல்லா
நாட்களும்
ஒரேமாதிரி
இருப்பதில்லை.
நினைவலைகள்:
சில
விஷயங்கள்
கனவென்று
தெரிந்தும்...
சில
நிமிடங்கள்
வாழ்ந்துபார்க்க தோன்றும்.
இன்றைய கல்வி:
கற்றுக்
கொள்வதற்குதான்
படிக்க வந்தேன்...
படிக்கதான்
கற்று
கொடுக்கிறார்கள்.
பார்வை:
கவிஞன்
வறுமையையும்
கவிதையாகத்தான்
பார்ப்பான்.
சுதந்திரம்:
சுதந்திர தினத்தன்று
சுதந்திரமாய் யாரும்,
சுதந்திரத்தை
கொண்டாடுவதில்லை
பள்ளி குழந்தைகள்
கூட...
புரட்சியாளன்:
எரியும்வரை
மட்டும்
போரளி - தலைவன்.
இதயமாற்றம்:
எனக்காக
துடித்துகொண்டிருந்த
என் இதயம்
உன்னை பார்த்தவுடன்
உனக்காக துடிக்க
ஆரம்பித்துவிட்டது.
முட்டாள் அறிவாளி:
திறமை
கொண்டிருப்பவன்
முட்டாள்தான் - தன்
திறமையை
வெளிகொண்டுவரும்
வரையிலும்.
உனக்குள்:
நீ
தேடிகொண்டிருக்கும்
அமைதி
உனக்குள்தான்
இருக்கிறது.
சுருக்கம்:
உன்
சிந்தனை
என்றுமுதல் வளர
தொடங்குகிறதோ?
அன்றுமுதல்
உலகம் சுருங்க
தொடங்குகிறது.
பிரிவினை:
மதம்பார்த்து
பெய்வதில்லை - மழை
சாதி பார்த்து
தூவுவதில்லை - சாரல்.
அழகு:
அமைதி
எவ்வளவு
அழகானது.
மோதிபார்:
முடியாது என்று
பதுங்குவதை விட
முடிவும் என்று
முயற்சி செய்
உன் தோல்வி கூட
சுவடுகளாகும்
வரலாற்றில்.
புதியது:
ஒவ்வொரு
உதயமும்
புதியதுதான்.
சிறியது:
உலகம்
மிகவும் சிறியது
தான்.
நம்
எண்ணங்களை
விட...
கவலை:
சிறு சிறு
இழப்புகளை
எல்லாம்
பெரியதாக எண்ணி
வாழ்வில் பெரிய
தருணங்களை
நழுவ விடாதே.
கானல்:
யாரோ காணும்
கனவில்
விளையாடும்
சிறு குழந்தையா
நான்
சற்று நேரத்தில்
மறைந்து
விடுவதற்க்கு.
பிரிவினை:
எல்லா
மதத்தின்
கோவில்களும்
இரவில்
கருப்பாகதான்
இருக்கும்.
பொருமை:
எதற்க்காகவோ
காத்திருப்பதை விட
எழுந்து
செயல்படுவது
நல்லது.
தீர்வுகள்:
நீ
எடுக்கும்
எந்தவொரு
முடிவுக்கும்
சரி, தவறு
என்ற இரண்டு
தீர்வுகள் மட்டும்தான்
உள்ளது.
புதிய கவிதை:
கவிதை எதுவும்
தோன்றவில்லை,
அதனால்
கவிதை எதுவும்
எழுதவில்லை.
நல்லது:
சில கனவுகள்
எதிர்பார்ப்பாகவே
இருப்பதே நல்லது
சில
எதிர்பார்ப்புகள்
கனவுகளாக
இருப்பதுவே
நல்லது.
பொய்:
உன்
பெயருடன்
ஒப்பிடும்
போது
கவிதை என்பது
பொய்யாகிறது.
பிரதிபலிப்பு:
தன்னம்பிக்கை,
சந்தோஷம்
இதில் எதை
நீ
பிறருக்கு
கொடுத்தாலும்
அதைவிட அதிகமாக
உனக்கு
திரும்ப கிடைக்கும்.
தலைவன்:
உலகில்
உயர்ந்த
பொருப்பு
மனிதன்
என்பது தான்.
ஊடல்:
உன்னை
நான்
காதலிக்கிறேன்
என்று
எனக்கு
தெரியாது.
சுதந்திரம்:
வண்ணத்துபூச்சியை
எல்லாரும்
விரும்புவதே - அது
சுதந்திரமாய் சுற்றி
திரிகிறது என்பதால்தான்
காதலிலும்
அப்படிதான்.
கனவு காதல்:
சில நொடிகள்
மறு ஜென்மம்
எடுத்து வருகிறது
மீண்டும்
உன்னுடன்
வாழ்ந்து
பார்ப்பதற்க்காக.
மேகம்:
வான
காகிதத்தில்
மேக
ஓவியங்கள்.
உனக்காகத்தான்:
இன்றைய
விடியல் உனக்கு
சொந்தமானது - ஆம்
சூரியன் உதயமானதே
உன்னை
காணத்தான்.
எல்லாருடைய விருப்பம்:
எத்தனை
வயதானலும் - நீ
குழந்தையாகவே இரு
உன்னை
எல்லாரும்
விரும்புவார்கள்.
உறுப்படியாய்:
இறந்த
காலத்தை
நிகழ்காலத்தில்
நினைத்து
எதிர்காலத்தை
தொலைக்காதே.
சுய நலம்:
நீ விரும்பும்
எந்த ஒன்றையும்,
யாருக்காகவும்,
எதற்க்காகவும்
விட்டு கொடுக்காதே.
ஏனெனில் - நீ
வாழ போவது
இந்த ஒரு
வாழ்க்கைதான்.
கொள்கை:
ஆபத்தான
சுதந்திரத்தை விரும்பு.
என்றும்
பாதுகாப்பான
அடிமைதனத்தை
விரும்பாதே.
உண்மை:
இந்த
உலகில்
உண்மையான
பொருள் - இருள்.
அதனால்தான்
இருள்
கண்களுக்கு
தெரிவதில்லை.
மேகங்கள்:
அட...
தூரிகைகள்
இல்லாமல்,
யார் தீட்டியது
இந்த
அழகிய ஓவியத்தை.
என்றோ ஒரு நாள்:
உன் வாழ் நாள்
முழுவதும்
சிரித்துகொண்டு
இருக்கத்தான்
நீ
பிறந்தவுடன்
அழுது தீர்த்து
விட்டாய்...
ஒட்டுமொத்த வளர்ச்சி:
வீடுகள் தோரும்
என்று
வாசல்களுக்கு
கதவுகள்
அவசியமற்று
போகிறதோ அன்றே?
உலகின்
ஒட்டுமொத்த
நாகரீகமும்
வளர்ச்சியடைந்த
தினமாகும்.
துணிவு:
கடிகாரத்தில்
காலம் ஒரு
அடையாளமே
தவிர
அதற்க்கு
கட்டுபட்டது அல்ல.
விழிப்பு:
இன்றைய
விடியலுக்காக
நீ
என்ன செய்தாய்..
இன்று
விழித்திருக்கிறாய்...
இந்த
விடியலில்
ஏதாவது செய்.
சிறிய மரணம்:
ஒவ்வொரு நாள்
இரவும் சிறிய
"மரணம்" தான்
காலையில்
கண்விழிக்கும்
வரை....
உனக்காக...:
இரவு
முழுவதும் பயணம்
செய்து
காலம் கடந்து
காத்திருக்கிறேன்.
இன்றைய விடியல்,
உன் விழிகளின்
தரிசனத்திற்க்காக...
நல்ல காலமில்லை:
சாதனை
புரிவதற்க்கு
எந்த
நாட்களாக இருந்தால்
என்ன,
முயற்சியும்,
தன்னம்பிக்கையும்
தான் அவசியம்.
பரிணாமம்:
நேற்று
நீ
குழந்தை
இன்றைவிட.
எதிர்பார்ப்பு:
சுய நலமில்லாத
அன்பு என்றும்
உன்னிடம்
இருந்து
அன்பை தவிர
எதையும்
எதிர்பார்க்கவில்லை.
திருப்புமுனை:
எதிர்பாராத
சிறு
பயணங்கள்தான்
நம் வாழ்க்கை
பயணத்தில்
திருப்புமுனையாக அமையும்.
கால சக்கரம்:
காலத்தின்
கால்களை உடைக்கும்
சக்தி எனக்கிருந்தால்,
கண்டிப்பாக
சந்தோஷம் தரும்
சில நிகழ்வுகளை
இன்னும்
கொஞ்சம் காலம்
நீடிக்கவைப்பேன்.
முடியும்:
மனதை
என்றும்
மகிழ்ச்சியாக
வைத்துகொள்
வானத்தில் உன்னால்
பறந்து பார்க்க முடியும்.
Newer Posts
Older Posts
Home