Sunday, November 28, 2010

நீ வருவாய் என...

நான்
தன்னந்தனியாக
உட்கார்ந்திருக்கும்
வேப்பமரம்
உனக்காக
காத்திருக்கிறது.
நம் இருவருக்கும்
நிழல் தருவதற்க்காக...

நான்
வைத்த
ரோஜா செடியின்
மொட்டுக்கள் எல்லாம்
மலராமல்
காத்துக்கொண்டிருக்கின்றது.
நீ
வரும்போது
நான் உன்
தலையில்
சூடுவதற்க்காக...

எங்க ஊர்
சாமியும்,
நீ வந்து
எப்போது
பொங்கல்
வைப்பாய் என்று
காத்துகொண்டிருக்கின்றது...

நான்
நடந்து செல்லும்
பாதையெல்லாம்
என்னுடன் ஜோடியாக
நீயும் எப்போது
கால்தடம் பதிப்பாய்
என்று
காத்துகொண்டிருக்கின்றது...

எங்க வீட்டு
புத்தகங்கள் எல்லாம்
நீ படிப்பதற்க்காக
திறக்கபடாமல்
காத்துகொண்டிருக்கின்றது....

உன்
கூந்தலில் இருந்து
உதிர்ந்த ஒற்றை
தலைமுடி,
உன் தலையிலிருந்து
விழுந்த பூயிதழ்,
உடைந்த
உன் கண்ணாடி வளையல்
நீ
கசக்கிபோட்ட
காகிதம்,
உன் காலடி மண்
இவையனைத்தும்
காத்துகொண்டிருக்கிறது
என்னால்
பத்திரபடுத்தப்பட்டு....

இவை அனைத்தும்
உனக்காக
காத்துகொண்டிருப்பது போல்
நானும்
காத்துகொண்டிருக்கிறேன்
உன்னிடம்
என் காதல்
சொல்ல....
நீ வருவாய் என...

No comments: