Tuesday, November 16, 2010

மவுனமாய்... என் காதல்...

நீ வரும்
பாதையில்
உனக்காகதான்
காத்திருக்கிறேன்.
நான் காத்திருப்பேன்
என்றுதான்
அந்த
பாதையில்
நீ வருகிறாய்.

நீ என்னை
காண என்னருகில்
வருவது தெரிந்தவுடன்,
நான் முகத்தை
திருப்பி கொள்கிறேன்.
உனக்காக
காத்திருக்கவில்லை
என்பதைப்போல்.
நான் உனக்காக
காத்திருக்கிறேன் என
தெரிந்தவுடன்,
நியும் முகத்தை
திருப்பி கொள்கிறாய்.
உனக்காக ஒன்றும்
வரவில்லை என்பதை போல,

நான்
விண்ணை பார்ப்பது போல்
உன்னை பார்க்கிறேன்,
நீ என்னை பார்க்கிறாய
என்று,
நீ மண்ணை
பார்ப்பது போல்
என்னை பார்க்கிறாய்,
நான் உன்னை
பார்க்கிறேனா என்று,

நான் நினைக்கிறேன்
நீதான்
என்னை பார்க்க வேண்டும் என்று.
நீ நினைக்கிறாய்
நான் தான்
உன்னை பார்க்க வேண்டும் என்று.

நீ என்னருகில்
இருக்கும் போதோ - இல்லை
நான் உன்னருகில் இருக்கும் போதோ
நாம் இருவரும்
உண்மையாக காதலிக்கவில்லை.

நான்
உன்னை விட்டு
விலகியிருக்கும்,
நீ என்னை
விட்டு விலகியிருக்கும்,
இந்த
தருணம் தான்,
நாம் இருவரும்
உண்மையாக காதலித்து
கொண்டிருக்கின்றோம்.

No comments: